Sunday, July 28, 2013

துணையை 'தூக்கி' விளையாடுங்கள்...

உண்மையிலேயே நமக்குப் பிடிச்ச பெண்ணைத் தூக்கிப் பார்த்து ரசிப்பது எவ்வளவு சந்தோஷமான விஷயம் தெரியுமா..!

சினிமாக்களில் மட்டும்தான் ஹீரோக்கள் ஹீரோயின்களை தூக்கி விளையாடனுமா, என்ன.. நிஜத்திலும் கணவர்களும், காதலர்களும்தான் ஹீரோக்கள்.. மனைவியரும், காதலியரும்தான் ஹீரோயின்கள். எனவே இவர்களும் கூட இப்படித் தூக்கி தூக்கி விளையாடலாம். தப்பே இல்லை காதலிலும், காமத்திலும் அன்னியோன்யத்திற்கு நிறைய முக்கியத்துவம் உண்டு. உடல் ஸ்பரிசமும், உள்ளக் கிளர்ச்சியும் இங்கு கொளுந்து விட்டு எரியும்போது உடலும், உள்ளமும் ஒரு சேர சந்தோஷப்படும்.

செக்ஸ் உறவின்போதும், ஜாலியான மன நிலையில் இருக்கும்போதும் பெண்களை ஆண்கள் தூக்குவது என்பது ரொம்ப வித்தியாசமானதாக இருக்கும். மற்ற நேரத்தி்ல் மனைவி அல்லது காதலியைத் தூக்க சிரமப்படும் ஆட்கள் கூட அந்த சமயத்தில் ஒரே தூக்காக தூக்கி விடுவார்கள்.

அப்போது அந்தப் பெண்கள் படும் சந்தோஷம் இருக்கே.. சொல்லி மாள முடியாது. தூக்குவதில் என்ன சந்தோஷம் இருக்கிறது என்பது தெரியவில்லை. இதுகுறித்து விஞ்ஞானப்பூர்வமாகவும் எதுவும் கூறப்பட்டதாக தெரியவில்லை. பெரும்பாலும் செக்ஸ் உறவு சமயத்தில்தான் இப்படி தூக்கி விளையாடுவதை அதிகம் செய்கிறார்கள் ஆண்கள். இப்படி செய்வதால் அந்தப் பெண்களுக்கு, தங்களது துணைவர்கள் மீது நிறைய மதிப்பும், ஆசையும் பெருகுகிறதாம். நம்மாளு நல்லா ஸ்டிராங்காதன் இருக்காரு என்று அவர்களுக்கு பெருமையாகவும் இருக்குமாம்.

இதனால்தான் தங்களைத் தூக்கும் கணவர் அல்லது காதலரை பெண்கள் ரசிக்கிறார்களாம். இப்படித் தூக்கி விளையாடுவது ஆண்களின் உரிமை இல்லை, பெண்களும் கூட இதைச் செய்யலாம். சரி தூக்குவது என்று முடிவான பின்னர் அதை எப்படிச் செய்யலாம் இதிலும் கலை நயத்தைப் புகுத்துங்களேன்..

உங்களால் எளிதில் தூக்க முடியும் என்று தோன்றினால் ஏதாவது சின்னதாக ஒரு ரொமான்ஸ் கவிதையை சொல்லியபடியே தூக்குங்குள். அப்படியே ரூமுக்குள் அல்லது வீட்டுக்குள் சின்னதாக ஒரு வலம் வாருங்கள். தூக்கிய நிலையி்ல் உதடுகளில் அழகாக ஒரு முத்தம் வையுங்கள், கண்களில் அழகாக முத்தமிடுங்கள், காதுகளில் சின்னதாக கிஸ் பண்ணுங்கள். சங்குக் கழுத்தில் சிக்கென்று ஒன்று வைத்து சிலிர்ப்ப்பூட்டுங்கள். கையில் தூக்கியிருக்கும்போது இடுப்பில் சின்னதாக விளையாட்டுக் காட்டுங்கள். மீன் போல அவர் துள்ளிக் குதிக்கும்போது மார்போடு கட்டி அணைத்து தாலாட்டுங்கள்.

தூக்கிய நிலையிலேயே அப்படியே ஏதாவது ஒரு டேபிளில் மெல்ல படுக்க வைத்து நீங்கள் அவர் மீது சாய்ந்து அப்படியே உள் வாங்கிக் கொண்டு உற்சாகமூட்டுங்கள்  முத்த மழையால். பிறகு முக்கியமான விஷயம், முடிந்தவரை நல்ல திடமாக பாலன்ஸ் செய்து கொண்டு துணையை தூக்குவது நல்லது.

சர்க்கரை அளவை கட்டுப்படுத்த வாழைப்பூ சாப்பிடுங்க

ஊதா மொட்டுகளுடன் குழாய் போன்ற அமைப்பில் தோன்றும் வாழைப்பூவின் பூக்கள் வெள்ளை நிறத்தில் இருக்கும். இதன் பூக்களை ஊறிந்தால் தேன்  போன்ற திரவம் இருக்கும். வாழைப்பூவில் வைட்டமின் ஈ மற்றும் ஃபிளாவனாய்டுகளை அதிகம் கொண்டுள்ளது. வாழைப்பூவில் புரதங்கள் மற்றும்  நிறைவுறா கொழுப்பு அமிலங்கள் காணப்படுகிறது. பலரும் வாழைப்பூவை உணவுக்காக பயன்படுத்துகின்றனர். இது நிறைய மருத்துவ பலன்களை  கொண்டுள்ளது எனினும் விஞ்ஞானரீதியாக எந்த ஒரு தவலும் இல்லை. ஆனாலும் இயற்கை மருத்துவத்தில் வாழைப்பூ பக்க விளைவுகளுக்கு  மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.

நோய் தொற்று:

எத்தனால் நோய் தொற்று காரணமாக உருவாகும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை வாழைப்பூக்களின் சாறுகள் மூலம் தடுக்கலாம்.. வாழைப்பூவில்  பேசில்லஸ் சப்ஸ்டில்ஸ், பேசில்லஸ் க்ரியூஸ் ஈஸ்செர்ச்சியா கோலி போன்றவைகளை கொண்டுள்ளதால் காயங்களை ஆற்றுவதற்கும் நோய்  தொற்று, அலர்ஜி என அனைத்திற்கும் இது பயன்படுகிறது.

மாதவிடாய் இரத்தப்போக்கு


வீட்டு வைத்தியத்தில் சிறந்தது வாழைப்பூ. மாதவிடாய் கோளாறால் அவதிபடுபவர்களுக்கு வாழைப்பூ உதவுகிறது. ஒரு கப் சமைத்த வாழைப்பூவுடன்  ஒரு கப் தயிர் சேர்த்து சாப்பிட்டு வந்தால் மாதவிடாயின் போது அதிக ரத்த போக்கு ஏற்படாமல் பாதுகாக்கிறது. சமைத்த வாழைப்பூவுடன் தயிர்  சேர்த்து சாப்பிடுவதால் உடலில் புரோஜெஸ்ட்டிரோன் அளவு அதிகரிக்கிறது. அதன் மூலம் மிகையான மாதவிடாய் தொடர்புடைய இரத்தப்போக்கு  குறைக்கிறது. பொதுவாக மாதவிடய் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கிறது.

நீரிழிவு நோய்
வாழைப்பூவை தினமும் நாள் ஒன்றுக்கு 0.15 முதல் 0.25 கிராம் என வேகவைத்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைத்து  ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும். ஆண்டிமைக்ரோபயசின் செயல்பாடு இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும் என  மருத்துவரீதியாக நிரூபிக்கபடவில்லை.  இது வீட்டு மருத்துவத்தில் மட்டுமே பயன்படுத்தபடுகிறது.

ஆரோக்கிய இதயத்தை எப்படி பாதுகாக்கலாம்

இதய சுகாதாரம் என்பது மிகவும் அவசியம். இதயம் தான் நமது உடல் உள்ள அனைத்து உறுப்புகளையும் பாதுகாத்துக்கொள்கிறது.. ஏனெனில் இருதய  அமைப்பில் அடங்கியுள்ள இதயம் மற்றும் இரத்த நாளங்கள் உடலை பராமரித்து ஆரோக்கியமாக வாழ்வதற்கு முக்கியமானதாகும். ஆதலால்  போதுமான உடற்பயிற்சியும், ஆரோக்கிய உணவுகளும் இதய பாதுகாப்பிற்கு அவசியம். இதை கடைபிடித்தால் இதய நோயிலிருந்து நம்மை  பாதுகாத்துக்கொள்ளலாம்.

உணவு கட்டுப்பாடு

உணவு கட்டுப்பாடு இதய ஆரோக்கியத்தை பேணிக்காப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.  இதில் மயோ கிளினிக் நிறைவுற்ற மற்றும் கொழுப்பின்  எல்லையை பரிந்துரைத்து இரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்கிறது. உயர் இரத்த கொழுப்பின் அளவு காரணமாக தமனியில் உள்ள பிளேக்  கட்டமைப்பை அதிகரிப்பதால் மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படுகிறது. குறைந்த கொழுப்புசத்துள்ள உணவுகளான மீன், கொழுப்பில்லா பால்,  பீன்ஸ், பட்டாணி மற்றும் பருப்பு, முட்டையில் வெள்ளைக்கரு போன்ற உணவு வகைகளை உட்கொள்ளலாம். பழங்கள், காய்கறிகள்,முழு தானியங்கள்,  ஃபைபர், போன்றவை இதய பாதுகாப்பிற்கான முக்கிய ஊட்டச்சத்துகளை கொண்டிருக்கிறது.

எடை நிர்வாகம்

தோற்றத்தை கவனத்தில் கொண்டாலும் ஆரோக்கியமான உடல் எடையை பராமரிப்பதில் கவனம் வேண்டும். உடல் பருமனாக இருந்தால் கரோனரி  இதய நோய் மரணத்தை அதிகரிக்கும் ஆபத்து இருப்பதாக அமெரிக்கன் ஹார்ட் ஃபவுண்டேஷன் தெரிவித்துள்ளது. 30 64 வயது வரை உள்ளவர்கள்  குறிப்பாக எடையை கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும்.. பருமனான உடல் கொண்டவர்களுக்கு உயர் இரத்த அழுத்தம், ட்ரைகிளிசரைடுகள்,  கெட்ட கொழுப்பு மற்றும், குறைவான ஹெச்டிஎல், போன்றவை இருக்க வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. ஆதலால் சத்தான உணவுகளை சாப்பிட்டு  ஆரோக்கியமான எடை மற்றும் ஆரோக்கியமான மனதை பராமரிக்க வேண்டும்.

உடற்பயிற்சி


ஆரோக்கிய இதயத்திற்கு தினமும் போதுமான அளவு உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடற்பயிற்சி செய்வதால் ரத்த ஒட்டமைப்பு மற்றும் தசைகள்  வலுவடைகின்றது. நடைபயிற்சி, நெடுந்தூர நடை, ஜாகிங், சைக்கிளிங் மற்றும் நீச்சல் போன்றவை ஆரோக்கிய இதயத்தை மேம்படுத்த சிறந்த  வழிகள். தினமும் செய்யக்கூடிய சில உடற்பயிற்சிகளான நாயுடன் நடைபயிற்சி, மாடிப்படி ஏறும் பயிற்சி, வெகுதொலைவில் இருக்கும் கடை,  போன்றவைகளுக்காக உங்களது காரை பயன்படுத்துவதை விட்டு விட்டு உங்களது கால்களை பயன்படுத்துங்கள் இது ஆரோக்கிய இதயத்திற்கு சிறந்த  பங்களிப்பாகும்.

வாழ்க்கை முறை

உங்கள் ஒட்டுமொத்த உடல்நலம் மற்றும் இதயத்தை பாதுகாக்கும் வாழ்க்கை முறையை தேர்வு செய்யுங்கள். அமெரிக்க இதய சங்கம் புகைபிடிப்பது  தான் இதய நோயிற்கு முக்கிய காரணம் என தெரிவித்துள்ளது. ஆதலால் புகைபிடிப்பதை நிறுத்த வேண்டும். கூடுதலாக புகைபிடிப்பதால் நுரையீரல்  நோயை ஊக்குவித்து, தடிப்பு ஏற்படுவதன் மூலம் இதயம் பாதிப்படைகிறது. புகை பிடிப்பது பக்கவாதம், வெளிப்புற தமனி நோய், அயோர்டிக் குருதி  நாள நெளிவு போன்ற ஆபத்தை ஏற்படுத்துகிறது.

ஆபத்து அறிகுறிகள்

அசெளகரியமான உணர்வு, மார்பு மையப்பகுதியில் அழுத்தம், முழுவதுமாக அழுத்தம் மற்றும் வலி, இரண்டு கைகளிலும் வலி, தாடை, கழுத்து  அல்லது வயிறு போன்ற பகுதிகளில் அழுத்தத்துடன் கூடிய வலி ஏற்படும். , மூச்சுத்திணறல், குளிர்ந்த வியர்வை, குமட்டல், இலேசான மயக்கம்,  போன்றவை மாரடைப்புக்கான அறிகுறிகள். திடீரென ஏற்படும் ஸ்ட்ரோக், திடீர் உணர்வின்மை போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரிடம்  அழைத்துச்செல்ல வேண்டும்.

குழந்தைப் பேற்றைத் தள்ளிப் போட வேண்டாம்

முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு இந்தத் தலைமுறைப் பெண்களிடம் குழந்தையின்மைப் பிரச்னை விஸ்வரூபம் எடுத்து வளர்ந்து வருகிறது.  வாழ்க்கை முறை, உணவுப்பழக்கம் எல்லாம் மாறிப் போனது ஒரு பக்கம் இருந்தாலும், குழந்தை பெற்றுக் கொள்ளும் வயதைத் தள்ளிப் போடுவதும்  பிரச்னைக்கான முக்கிய காரணம் என்கிறார் பிரபல மகப்பேறு மருத்துவர் ஜெயராணி.

சினைப்பையில் உள்ள முட்டைகளின் இருப்பு குறைவதே காரணம் என்பவர், அதைப் பற்றி விளக்கமாகப் பேசுவதுடன், முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகளையும் வலியுறுத்துகிறார். ‘‘ஒரு பெண் குழந்தை, அம்மாவோட வயித்துல உருவாகிறப்பவே, அதோட சினைப்பைல இத்தனை  மில்லியன் முட்டைகள் இருக்கணுங்கிறது தீர்மானிக்கப்படும்.

அந்தக் குழந்தை வயசுக்கு வர்றப்ப, லட்சக்கணக்குல உள்ள அந்த முட்டைகள், மாதவிலக்கு மூலமா மாசா மாசம் வெளியேறி, குறைஞ்சுக்கிட்டே  வரும். பிரசவத்தின் போது இன்னும் குறையும். இப்படி குறைஞ்சுக்கிட்டே வந்து, ஒரு கட்டத்துல முழுக்க முட்டைகளே இல்லாமப் போகிறப்ப,  மாதவிலக்கு வராது. அதைத்தான் மெனோபாஸ்னு சொல்றோம்.

சினைப்பையில முட்டைகள் உருவாகும்போதே கம்மியா இருந்தா, 30, 35 வயசுலயே பெண்களுக்கு மாதவிலக்கு நிற்கலாம். அதை ‘ப்ரீமெச்சூர்  ஓவரியன் சின்ட்ரோம்’னு சொல்றோம். இந்தத் தலைமுறைப் பெண்கள், வேலை, சொந்த வீடு, வசதிகள்னு வாழ்க்கையில செட்டிலான பிறகுதான்  கல்யாணம், குழந்தை பத்தி யோசிக்கிறாங்க. 30 வயசுல கல்யாணம் பண்ணிட்டு, 35 வயசுல மாதவிலக்கு சுழற்சி சரியில்லை, குழந்தை இல்லைன்னு  சொல்லிட்டு, சிகிச்சைக்கு வருவாங்க.

டெஸ்ட் பண்ணிப் பார்த்தா, அது மெனோபாஸுக்கான அறிகுறியா இருக்கும். இன்னும் சில பெண்களுக்கு சின்ன வயசுல சினைப்பை கட்டிகள் வந்து,  அதுக்காக ஆபரேஷன் செய்திருப்பாங்க. அதனாலயும் சினைப்பையில உள்ள முட்டைகளோட இருப்பு குறைஞ்சு, ‘ப்ரீமெச்சூர் ஓவரியன் சின்ட்ரோம்’  பிரச்னை வரலாம். இப்பவும் சின்னச் சின்ன கட்டிகளுக்கு ஆபரேஷன் பண்ணிக்கிட்டு, பாதி முட்டைகள் குறைஞ்ச நிலையில கிராமத்துலேருந்து வர்ற  பெண்கள் ஏராளம்.

கட்டிகள் இருக்கிறது தெரிஞ்சா, கூடியவரைக்கும், அதை அறுவை சிகிச்சையில அகற்றாம, சினைப்பையைத் தொந்தரவு பண்ணாம குணப்படுத்த  முயற்சி பண்றதுதான் பாதுகாப்பானது. அடுத்து, எக்ஸ் ரே போன்ற ரேடியேஷன் தொடர்பான துறைகள்ல வேலை செய்யற பெண்களுக்கும், சினைப்பை  முட்டைகள் அழிய வாய்ப்புகள் அதிகம். அந்த அபாயம் தெரிஞ்சு, இந்தப் பெண்களும், திருமணத்தையும், குழந்தைப் பேற்றையும் தள்ளிப் போடாம  இருக்கிறது நல்லது.

அம்மாவுக்கு இள வயதுலேயே மாதவிலக்கு நின்றிருந்தால், அவங்க பெண்கள் எச்சரிக்கையா இருக்கணும். உடனடியா மருத்துவரைப் பார்த்து,  தேவைப்பட்டா, ஏ.எம்.ஹெச் என்ற ஹார்மோன் சோதனையை செய்து பார்த்து, கருத்தரிக்கும் திறனைத் தெரிஞ்சுக்கிட்டு, தகுந்த சிகிச்சைகளை  எடுத்துக்கலாம். அலட்சியமா விட்டுட்டு, பிறகு குழந்தையின்மைக்காக, ஐ.வி.எஃப் மாதிரியான நவீன சிகிச்சைகளைத் தேடி ஓட வேண்டிய  அவதிகளையும் இதன் மூலம் தவிர்க்கலாம்...’’ என்கிறார் டாக்டர் ஜெயராணி.

விரதம் ஏன் எது எப்படி எப்போது?

‘வயிறு நிறைந்திருக்கும்போது விரதம் பற்றி யோசிப்பதும் பேசுவதும் சுலபம்’ என்பார்கள். அது எவ்வளவு உண்மை என்பது உணர்ந்தவர்களுக்குத்  தெரியும். பெண்களையும் விரதத்தையும் பிரிக்க முடிவதில்லை. எந்தக் கடவுளும் பட்டினி இருந்து, தன்னை வேண்டச் சொல்வதில்லை. ஆனாலும்,  பெண்கள் தம்மை வருத்தி, உணவைத் தவிர்த்து, பசியை சகித்துக் கொள்கிற விரதங்கள், அவர்களது பிரார்த்தனையின் முக்கிய அங்கம். கடவுளின்  பெயரைச் சொல்லிக் கடைப்பிடித்தாலும், விரதம் என்பது ஆரோக்கிய வாழ்க்கைக்கு அவசியமான ஒன்றுதான்.

விரதம் என்பது மதத்துக்கு மதம், மக்களுக்கு மக்கள் வேறுபடுகிறது. சிலருக்கு ஒரு வேளை உணவு.... இன்னும் சிலருக்கு இருவேளை உணவு.  வெறும் பழங்களை சாப்பிடுவது, உப்பு தவிர்த்து இனிப்பு மட்டும் எடுத்துக் கொள்வது, அசைவம் மட்டும் தவிர்ப்பது... இப்படி விரதங்கள் பல விதம்.  ஏன் விரதமிருக்க வேண்டும்? எது சரியான விரதம்? யாரெல்லாம் விரதமிருக்கலாம்? விரதமிருக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள்  என்னென்ன? விரிவாகப் பேசுகிறார் உணவு மற்றும் ஊட்டச்சத்து ஆலோசகரான ஷைனி சந்திரன்.

‘‘நாம் உண்கிற உணவானது செரித்து, அதன் பிறகு அதிலுள்ள கொழுப்பு ஆற்றலாக மாற்றப்பட குறைந்தது 6 முதல் 8 மணி நேரம் தேவை. அந்த  நேரத்தை அனுமதிக்காமல், அதற்குள் அடுத்த வேளை சாப்பாட்டை உள்ளே தள்ளுவதால், உடலில் சேமிக்கப்பட்ட கொழுப்பானது, உடலியக்கத்துக்குத்  தேவையான ஆற்றலாக உபயோகப்படுத்தப்படுவது தடுக்கப்பட்டு, அப்படியே தேங்கிப் போகும். தினமுமே அடுத்த வேளை உணவுக்கு இடையில்  போதிய இடைவெளியை அனுமதிப்பது கூட ஒரு வகையில் விரதம்தான்...

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வாரம் ஒரு முறை விரதமிருப்பது சரியானது. சிலர் வாரம் இரண்டு முறைகூட விரதமிருப்பதுண்டு.
வாரத்தில் எல்லா நாள்களும் மூன்று வேளைகளும் வயிறு முட்ட சாப்பிட்டுப் பழகி விட்டு, திடீரென ஒரு நாள் விரதத்தைக் கடைப்பிடிப்பார்கள் சிலர்.  அது தவறு. விரதத்துக்கு இரண்டு நாள்களுக்கு முன்பிருந்தே காரம் குறைவான, பருப்பு, சாதம் மாதிரி நன்கு வெந்த உணவுகளையும், ரசம் சாதம்,  மோர் மற்றும் பழங்களையும் சாப்பிட வேண்டும்.

அடுத்த நாள், இளநீர், மோர், துளசி சேர்த்த தண்ணீர் மற்றும் பழச் சாறுகள் என திரவ உணவுகளாக சாப்பிடலாம். அதற்கடுத்த நாள், காலை மற்றும்  இரவு உணவுக்கு வெறும் பழங்களையும், மதிய உணவுக்கு மிதமான காரமற்ற உணவுகளையும் எடுத்துக் கொள்ளலாம். மூன்றாவது நாளில் இருந்து  வழக்கமான உணவுப்பழக்கத்துக்கு மாறலாம். இது ஒரு வகையான விரதம். இன்னொரு முறையில், மாலை வரை வெறும் பழங்களையும் திரவ  உணவுகளையும் மட்டும் எடுத்துக் கொண்டு, இரவுக்கு மிதமான உணவு சாப்பிடுகிற முறை.

இது தவிர இன்று விதம் விதமான விரத முறைகளைக் கடைப்பிடிக்கிறார்கள் மக்கள். சிலர் வெறும் பழங்களை மட்டுமே சாப்பிடுவார்கள். அப்படி  சாப்பிடும் போது, உடலுக்குள் போகும் உப்பின் அளவு குறைவாக இருக்கும். எனவே உடலில் தண்ணீர் சேராது. நடிகைகள், மாடல் போன்றவர்கள்,  போட்டோ ஷூட்டுக்கு முன்னால், 3 நாள்களுக்கு பழ விரதம்தான் இருப்பார்கள். அதன் விளைவாக அவர்களது முகத்தில் பொலிவு கூடும். உடலில்  தண்ணீர் தேக்கம் இருக்காது என்பதே காரணம்.

கண்களுக்கு அடியில் வீக்கமும் இருக்காது. இங்கிலாந்தில் இப்போது 5:2 டயட் என்பது ரொம்பப் பிரபலம். இதில் வாரம் 2 நாள்கள் விரதத்தைக்  கடைப்பிடிக்கிறார்கள். விரத நாளன்று ஆண்களுக்கு 600 கிலோ கலோரிகளும், பெண்களுக்கு 500 கிலோ கலோரிகளும் மட்டுமே அனுமதி. எடை  குறைக்க விரும்புகிற பலரும் இதையே பின்பற்றுகிறார்கள். வாரம் ஒரு முறை விரதமிருந்தாலே  உடலிலுள்ள நச்செல்லாம் வெளியேற்றப்பட்டு,  உடல் சுத்தமாகும்.

விரதத்தை முடிக்கும் போது பழரசம்  குடிப்பது ஏன்?


சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகள் போன்றவர்கள் உண்ணா விரதமிருக்கும் போது, கடைசியில் பழச்சாறு குடித்து, அதை முடிப்பதைப்  பார்த்திருக்கிறோம். அது ஏன் தெரியுமா? பழச்சாறு செரிமானமாவதில் சிக்கல் இருக்காது. அது விரைவில் ரத்தத்துடன் கலந்து, குளூக்கோஸுக்கு  இணையாக உடனடியாக உடலுக்கு சக்தியைக் கொடுக்கக் கூடியது. நீண்ட நேரம் உண்ணாமல் இருக்கும் போது, பழச்சாறு குடிப்பதன் மூலம் இழந்த  சக்தியை சுலபமாகத் திரும்பப் பெற முடிகிறது. பழங்களில் வைட்டமின்கள், கனிமங்கள் என எல்லாம் இருப்பதால், அது ஆரோக்கியமானதும்கூட.  விரதத்தை முடிக்கிற போது, பழச்சாறுதான் குடிக்க வேண்டும் என்றில்லை. இளநீர் கூட மிக நல்லது.

விரதமிருக்கும் போது தவிர்க்க வேண்டிய  உணவுகள் எவை?

செரிமானத்துக்குக் கடினமான எந்த உணவும் விரத நாள்களில் தவிர்க்கப்பட வேண்டும். பால், மசாலா சேர்த்த உணவுகள், அசைவம், அரிசி மற்றும்  கோதுமை உணவுகள், அதிக உப்பு, காரம் சேர்த்த உணவுகள், செயற்கை உணவுகள் கூடவே கூடாது. செரிமானத்துக்கு மெனக்கெடுவதைத் தவிர்த்து,   உள் உறுப்புகளை சுத்தம் செய்வதற்கு உடல் அந்த நேரம் எடுத்துக் கொள்ளும். முதுமை தள்ளிப் போகும். இன்சுலின் எதிர்ப்பு சக்தி மேம்படும். விரத  நாள்களில் மிதமான, பாதகமில்லாத உணவுகளை எடுத்துக்
கொள்வதன் விளைவாக, ஆரோக்கியம் மேம்படுவதுடன், ஆயுளும் கூடும்.

விரதம் இருந்தால் உடல் இளைக்குமா?


விரதமிருக்கும் போது பெரும்பாலும் பழங்கள் அல்லது திரவ உணவுகளையே எடுத்துக் கொள்கிறோம். அரிசி சாதம், ரொட்டி, இட்லி, தோசை, சட்னி,  ஊறுகாய், அப்பளம், காரசார புளியோதரை, காரக்குழம்பு போன்றவை தவிர்க்கப்படுவதால் உடலில் தண்ணீர் சேர்வதும் தவிர்க்கப்படுகிறது. நமது   உடலானது தசைப்பகுதிகளில் தண்ணீரைச் சேர்த்து வைத்திருக்கும். கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை உண்ணும்போது, அவற்றில் உள்ள  உப்பும், தன் பங்குக்கு தண்ணீரை சேமிக்கும். எனவே விரதமிருக்கும் போது எடை பார்த்தால், அதில் சில கிலோ குறைவாகத்தான் காட்டும். ஆனால்,  அது கொழுப்பு கரைந்ததாக அர்த்தமாகாது!

விரதத்தை முடித்து விட்டு விருந்து சாப்பிடலாமா?

அது அத்தனை மணி நேரம் விரதம் இருந்த பலனையே கெடுத்து விடும். விரதம் என்பது உணவு சார்ந்த ஒருவித ஒழுக்கக் கட்டுப்பாடு. குறைந்த  கலோரி உணவுகளை உண்ணும்போது, ஆயுள் அதிகரிக்கிறது. அதன் விளைவாக முதுமைத் தோற்றமும் தள்ளிப்போடப்படுகிறது. எனவே, விரதத்தை  முடித்த பிறகும், மிதமான உணவுகளை அளவோடு எடுத்துக் கொள்வதுதான் நல்லது.

யாரெல்லாம் விரதம் இருக்கக் கூடாது?


குழந்தைகள், டைப் 1 நீரிழிவு பாதிக்கப்பட்டவர்கள், கர்ப்பிணிகள்... தசை நலிவு நோயால் (சிறீவீஸீவீநீணீறீ னீஹ்ஷீஜீணீtலீஹ்)  பாதிக்கப்பட்டோர்...

சுவாச பிரச்சனைகளைத் தீர்க்கும் யூக்கலிப்டஸ்

அனைவருக்கும் யூக்கலிப்டஸ் எண்ணெய்யின் பயன்பாடு மற்றும் நன்மைகள் பற்றி தெரியும். நூற்றாண்டுகளுக்கு மேலாக ஆரோக்கிய சிகிச்சைக்காக இதன் எண்ணெய்யை பயன்படுத்தி வருகிறார்கள். யூக்கலிப்டஸ் மரங்களில் இருந்து ஆஸ்திரேலியாவால் முதன்முதலாக எண்ணெய் தயாரிக்கப்பட்டது. பல அத்தியாவசிய எண்ணெய்கள் சிறந்த நன்மைகளை கொண்டிருந்தாலும் இது இன்னும் தனிப்பட்ட பல நலன்களைகொண்டிருக்கிது யூக்கலிப்டஸ் எண்ணெய்.

யூக்கலிப்டஸ் எண்ணெய் தோல் மற்றும் அழகு பராமரிப்பிற்கு உபயோகப்படுத்தப்படுகிறது. யூக்கலிப்டஸ் எண்ணெய் மாற்று மற்றும் சிகிச்சைமுறை காரணமாக பெரும்பாலும் முதலுதவி மருந்தாகப் பயன்படுகிறது. இது கொப்புளங்கள், சிறு காயங்கள், வெட்டுக்கள், மற்றும் சிராய்ப்புகளையும் குணமாக்க பயன்படுத்தப்படுகிறது. யூக்கலிப்டஸ் எண்ணெய் தோல் எரிச்சல், பூச்சி கடி, தசை வலி நிவாரணத்துக்கு உதவுகிறது.

சுவாச பிரச்சனைகள்


இன்றைய சூழலில் பலர் ஆஸ்துமா பிரச்சனையால் அவதிபடுகின்றனர். ஆஸ்துமா, மார்பு சளி அல்லது நெரிசல் போன்ற சுவாச பிரச்சினை இருந்தால், யூக்கலிப்டஸ் எண்ணெய்யை பயன்படுத்தலாம். சூடான நீரில் கொஞ்சம் யூக்கலிப்டஸ் எண்ணெய்யை சேர்த்து பருகினால் இரத்தசோகை, எதிர்ப்பு அழற்சி போன்ற பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுகிறது.
 
தசை வலி நிவாரணம்


தசை வலியால் அவதி படுபவர்களுக்கு யூக்கலிப்டஸ் எண்ணெய்யை உதவுகிறது.. நீங்கள் வெறுமனே பாதிக்கப்பட்ட பகுதியில் அதாவது தசைகளில் வலி ஏற்படும் இடங்களில் யூக்கலிப்டஸ் எண்ணெய்யை போட்டு மஸாஜ் செய்வது போல தேய்க்க வேண்டும். கடினமான தசைபுண், சுளுக்கு, தசைநார், நரம்புகளில் வலி போன்ற தீவிர பிரச்சனைகள் அனைத்திற்கும் யூக்கலிப்டஸ் ஆயிலை தேய்த்து மஜாஸ் செய்தால் தசை வலியிலிருந்து குணம் பெறலாம்.

காய்ச்சல்


காய்ச்சல் என்றால் உடல் அதிக வெப்பமுடன் இருக்கும். யூக்கலிப்டஸ் எண்ணெய் உடலில் உள்ள வெப்பநிலையை குறைக்க பயன்படுகிறது. யூக்கலிப்டஸ் எண்ணெய்க்கு பொதுவாக காய்ச்சல் எண்ணெய் என்ற பெயரும் உள்ளது.

குடல் புழுக்கள்

யூக்கலிப்டஸ் எண்ணெய் ஒரு புழுக்கொல்லி மற்றும் குடல் கிருமிகள் நீக்க பயன்படுத்தப்படுகிறது. மேலும் நீரிழிவு உள்ளவர்கள் யூக்கலிப்டஸ் எண்ணெய்யை உட்கொண்டால் ரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவு கட்டுபடுத்தபடும். யூக்கலிப்டஸ் எண்ணெய் அடிக்கடி தோல் நோய் சிகிச்சைக்காக குறிப்பிட்ட இடத்தில் பயன்படுத்தப்படுத்தலாம்..

மலட்டுத்தன்மையை போக்கும் தேனீயின் மகரந்தம்

தேனீயின் மகரந்தமானது உலகம் முழுவதும் மருத்துவத்திற்கு பயன்படுத்தப்படும் ஒரு சிறந்த மருந்தாகும். தேனீயின் மகரந்தமானது பெரிய  தேனீக்களின் மூலம் உருவாக்கப்பட்டு இளம் தேனீக்களை வளர்க்க மகரந்தத்தை உணவாக வழங்குகிறது. இயற்கையின் மிக முக்கியமான  ஊட்டமளிக்கும் உணவாக கருதப்படுகிறது. இந்த மகரந்த உணவானது மனிதனுக்கு தேவைப்படும் அனைத்து ஊட்டச்சத்துகளையும் கொண்டுள்ளது.  தேனீ சேகரிக்கும் மகரந்தத்தில் புரதம் சுமார் 40%, இலவச அமினோ அமிலங்கள், பி காம்ப்ளக்ஸ் வைட்டமின், ஃபோலிக் அமிலம்  போன்றவை  நிறைந்துள்ளது.

தேனீயின் மகரந்தம் முழுமையான இயற்கை உணவு, இதில் முழுமையாகவே விலங்கு சம்பந்தப்பட்ட சிறு பொருட்களைக் கூட கொண்டிருக்காது. மகரந்தமானது விலங்குகளின் மூல ஆதாரங்களை விட புரதங்களை அதிகம் கொண்டுள்ளது அதாவது இதில் மாட்டிறைச்சி, முட்டை, சீஸ் போன்றவற்றை விட அதிக அமினோ அமிலங்களை கொண்டுள்ளது. இதன் புரதத்தில் பாதிக்கு மேலாக அமினோ அமிலங்களை கொண்டுள்ளதால் அப்படியே பயன்படுத்தலாம். ஒரு டீஸ்பூன் மகரந்தத்தை தயாரிக்க ஒரு நாளைக்கு எட்டு மணி நேரத்தை செலவிடுகிறது. ஒரு டீஸ்பூன் மகரந்தத்தில் 2.5 பில்லியன் தானியங்கள் உள்ளது.

ஆற்றலை வழங்கும்

தேனீயின் மகரந்தம் அதிக ஊட்டச்சத்துகளை கொண்டுள்ளதால் மனதனுக்கு தேவையான இயல்பான ஆற்றலை வழங்குகிறது. இதில்  கார்போஹைட்ரேட், புரதம், வைட்டமின் பி கொண்டுள்ளதால் உடல் உறுதியை மேம்படுத்தி சோர்வை நீக்கி நாள் முழுவதும் சுறுசுறுப்பை தருகிறது.

தோல் பராமரிப்பு

தேனீயின் மகரந்தம் தோலில் ஏற்படும் தடிப்பு, அலர்ஜி, எக்ஸிமா, பொதுவாக தோல் எரிச்சல்,  போன்றவற்றை சரிசெய்ய மேற்பூச்சி பொருட்களில்  பயன் படுத்தப்படுகிறது. இது அமினோ அமிலங்கள் மற்றும் வைட்டமின்கள் கொண்டுள்ளதால் தோலை பாதுகாத்து செல்களின் மறு உருவாக்கத்திற்கு  உதவுகிறது.

சுவாச அமைப்பு

நுரையீரல் திசுக்களின் காரணமாக உருவாகும் ஆரம்பகட்ட ஆஸ்துமாவை தடுக்கும். ஏனெனில் ஆஸ்துமாவை தடுப்பதற்க்கு தேவையான  ஆண்டியாக்ஸிடண்ட்களை அதிக அளவு கொண்டுள்ளது.  இருதய அமைப்புக்கு ஆதரவு புரிகிறது. ஆக்ஸிஜனேற்ற எதிர்பொருட்களை அதிகளவு  கொண்டுள்ளதால் இரத்த நாளங்கள், இரத்த ஓட்ட பிரச்சினைகள், கொழுப்பு அளவுகளை சரி செய்து இருதய அமைப்புக்கு ஆதரவு தருகிறது. மேலும்  பக்கவாதம், மாரடைப்பை தடுக்கிறது.

செரிமான அமைப்பு

இதில் ஆரோக்கியமான வைட்டமின்கள், தாதுக்கள், புரதம் ஆகியவற்றை கூடுதலாக கொண்டுள்ளதால் செரிமானத்தை சரிசெய்கிறது. ஏனெனில்  தேனீயின் மகரந்தம் செரிமானத்திற்கு உதவும் என்சைம்களை கொண்டுள்ளது. என்சைம்கள் நமது உடலுக்கு தேவையான அனைத்து  ஊட்டச்சத்துகளையும் கிடைக்க செய்கிறது.  மேலும் ஒவ்வாமைகளை குணப்படுத்தும் ஆற்றலையும் கொண்டுள்ளது..

மலட்டுத்தன்மையை

தேனீயின் மகரந்தம் கருப்பையின் செயல்பாட்டை தூண்டி முட்டைகளை மீளுருவாக்கும் செய்கிறது. எனவே கர்ப்பத்தை தூண்டுவதற்கு பெரிதும்  உதவுகிறது. இது ஒரு வகையிலான ஹார்மோன் பூஸ்டர், பாலுணர்வூக்கி எனவும் அழைக்கின்றனர்.  புரோஸ்டேட்க்கு உதவி புரிகிறது. அதாவது  புரோஸ்டேட் மிகைப்பெருக்கத்தால் பாதிக்கப்பட்ட ஆண்கள் தேனீயின் மகரந்தம் மூலம் நிவாரணம் காணலாம். மேலும் வீக்கத்தை குறைத்து சிறுநீர்  கழிப்பை அதிகப்படுத்துகிறது.

Sunday, July 21, 2013

மூச்சு இழுத்து விட்டால் தலைவலி பறந்து போகும்

வலது நாசியை சூரியகலை என்பர்
இடது நாசியை சந்திரகலை என்பர்
சூரியகலையை (வலது நாசி) மூடிக்கொண்டு சந்திரகலையால் (இடது நாசி) ஒரு ஐந்து நிமிடம் மூச்சு இழுத்து விட்டால் தலைவலி பறந்து போகும்....
அதே போல் இடது நாசியை மூடிக்கொண்டு வலதுநாசியால் மூச்சு இழுத்து விட்டால் உடம்பு அலுப்பு சரியாகும் ....

Tuesday, July 16, 2013

செரிமானக் கோளாறை போக்கும் ஓமம்

ஓமம் (ajwain) உடலில்  ஏற்படும் அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இந்த செடியின் அனைத்து பாகங்களும் யுனானி,  ஆயுர்வேத மருத்துவத்திற்கு முக்கியமானதாக பெரிதும் பயன்படுகிறது.. ஓமத்தின் விதைகளை மசாலா பொருளாக சமைப்பதற்குபயன் படுத்துகின்றனர். மேலும் பிஸ்கட், சாஸ், ரசங்கள், குளிர்பானங்கள், ஊறுகாய் போன்றவற்றை தயார் செய்யும் போது இதனை பயன்படுத்துகின்றனர். இதன் விதைகளைக் கொண்டு தேநீர் செய்து குடிக்கின்றனர். ஓமத்தால் ஏற்படும் உடல் நல நன்மைகள் என்ன என்று  பார்க்கலாம்.

வாயு வெளியேற்றம்:
வாயு பிரச்சனையிலிருந்து விடுபட 125 கிராம் தயிர், 2 கிராம் ஓமம், 1/2 கிராம் கருப்பு உப்பு, சேர்த்து சாப்பிட்டால் வாயு  சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் எளிதில் நீக்கி விடும் தன்மை கொண்டது. இதை மதிய உணவிற்கு பிறகு 10 முதல் 15 நாட்களுக்கு  தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் விக்கல், குமட்டல், உளறுதல் மற்றும் அஜீரணம் ஆகிய பிரச்சனைகளை தீர்க்கும்

செரிமானக் கோளாறு: சரியான முறையில் செரிமானம் ஆகாததால் செரிமானக்கோளாறு ஏற்பட்டு குடலில் புண் ஏற்படும். இந்த பிரச்சனைகளை  தவிர்க்க சாப்பிட்ட பிறகு ஓமத்தை எடுத்து வாயில் போட்டு மென்று கொள்வதால் செரிமான பிரச்சனைகளை தீர்க்க முடியும்..

ஈறுகளில் வீக்கம்: ஈறுகளில் வீக்கம் ஏற்பட்டு இருந்தால் ஓம எண்ணெய் ஒரு துளி அளவு சேர்த்து சில நிமிடங்களுக்கு பின் வாயில் ஊற்றி 5  நிமிடத்திற்கு பின் அலசிவிடவேண்டும். இப்படி செய்வதால் வாய் நாற்றம், ஈறுகளில் ஏற்பட்ட வீக்கம் அனைத்திலிருந்தும் நிவாரணம் பெறலாம்.

மூட்டு வலிகள்: ஓம(ணீழீஷ்ணீவீஸீ) எண்ணெய்யை கடுகு சேர்த்து சுடவைத்து மூட்டுவலி உள்ள இடங்களில் மஜாஜ் செய்வது போல நன்கு  தடவினால் மூட்டுவலிக்கு தீர்வு காணலாம்.

வலி மற்றும் காயங்கள் : ஓம விதைகளுடன் தண்ணீர், மஞ்சள் சேர்த்து பேஸ்ட் போல செய்து காயங்கள் ஏற்பட்ட இடத்தில் போட வலி மற்றும்  வீக்கங்கள் குணம் பெறும்.

வயிறு வலி: வயிற்று வலியால் அவதிப்படுவோர் சூடான தண்ணீரில் மிளகு 1 தேக்கரண்டி, ஓமம் 1 தேக்கரண்டி சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால்  வயிற்றுவலி குணமாகும். அரிப்பு, படை, எக்ஸிமா போன்றவைகளுக்கு கொதிக்கும் தண்ணீரில் ஓமத்தைப்போட்டு வெந்ததும் அதை பேஸ்ட்டாக  செய்து அரிப்பு ஏற்படும் இடத்தில் தடவ வேண்டும். இந்த பேஸ்ட்டை முகத்தில் ஏற்படும் பருக்களிலும் தடவலாம்.வ்

நல்லதோர் தாம்பத்தியம் நலமாகும் உடல் நலம்

தாம்பத்தியத்தில் வெற்றிக்கும், தொடர் வெற்றிக்கும் கணவன்- மனைவி இருவரின் உடல் நலமும், மன நலமும் முக்கியம். அதனால் அன்றாட உணவில் ஊட்டச்சத்துகள் நிறைந்த புரதம், கொழுப்பு, வைட்டமின்கள், தாதுப் பொருட்கள் நிறைந்த சைவ, அசைவ உணவுகளையும், காய்கறிகள், பழங்கள், கீரைகள் போன்றவற்றையும் சேர்த்துக்கொள்ளவேண்டும்.

எந்த சந்தர்பத்திலும் பாலியல் சக்தியை அதிகரிக்கும் என்று சொல்லும் போலி மருந்துகளை சாப்பிடக்கூடாது.

சாப்பிட்டதும், உடலுறவை வைத்துக்கொள்ளக் கூடாது. இதனால் முழுமையான இன்பம் கிடைக்காது. வயிற்றில் உணவு முழுமையாக இருந்தால் , செயல்பாடுகளில் ஆர்வம் கட்ட முடியாது.

உறவுக்கு முன், இனிமையான உரையாடலும், உணர்வு பரிமற்றலும், முன் விளையாட்டுகளும் இருக்க வேண்டும். அப்போது தான் உறவில் முழுமை பெற முடியும்.

தாம்பத்தியம் ஓர் இனிய சங்கீதம். இசைப்பதும், ரசிப்பதும் மென்மையாகவும் நிதானமாகவும் இருக்க வேண்டும். ஆவேசமும், அவசரமும் காட்டினால் தாம்பத்தியம் அரைகுறையாகவும் அலங்கோலமாகவும் ஆகிவிடும்.

கோபம், சண்டையைத் தீர்க்கக்கூடிய சக்தி செக்ஸ்க்கு உண்டு. ஆனால், மன மன ஒற்றுமை ஏற்படாமல் உடல்களால் மட்டுமே இயங்கி உடல் வேட்கையைத் தணிக்க முயற்சிப்பது நல்லதல்ல. மேலும், அழ்ந்த மன பாதிப்புகள் தம்பதிய உறவுக்குப் பெரும் எதிரியாகும்.

தாம்பத்தியத்தில் ஒரே மாதிரி செயலாற்றும் இயந்திரத் தனங்கள் இனிமை தராது. அதே நேரத்தில் அளவுக்கு மீறிய எல்லை எல்லா மீறல்களும் சிகல்களில் விட்டுவிடும்.

மனமும் உடலும் ஒத்துழைக்கும்  வரை  அடிக்கடி உளவு கொள்ள முடியும் என்றாலும், தம்பதிகள் தங்களுக்கும் சில கட்டுப்பாடுகள்  விதித்துக்கொண்டல், உறவு பற்றி ஆவலாக எதிர்பார்த்து காத்திருந்து இன்பம் அடைய முடியும்.

வயது அதிகரித்ததும், குழந்தை வளர்ந்ததும் தம்பதிய உளவு கொள்வது பாவம் என்று நினைக்கத் தேவையில்லை. இன்பம் தரும் உடலுறவுக்கு வயது ஒரு தடையில்லை.

கணவன் மனைவியின் அந்தரங்கமான இல்லற வாழ்வில் ஒருவர் விருப்பத்தை மற்றொருவர் புரிந்து கொள்ள வேண்டும்.

செக்ஸில்எதுவுமே தவறில்லை என்பதால் இப்படிப் பேசினால் அநாகரிகம், அப்படிச் செய்தால் அநாகரிகம் என்று என்ன தேவையில்லை. படித்தவர்கள், நல்ல வேளையில் இருப்பவர்கள் இது போன்று எல்லாம் செய்யக்கூடாது என்று தங்களுக்குள் கட்டுப்பாடு விதித்துக் கொள்ளக்கூடாது. இருவரது விருபங்களில் ஆரோக்கியமான அனைத்துமே, சுகமான அனைத்துமே பாலியல் வாழ்கை நெறிப்படி சரியானதுதான்.

தாம்பத்தியம்  ஒரே அலைவரிசையில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இருப்பதில்லை. ஆணுக்கும் அடிக்கடி ஏற்படும் என்றாலும், பெண்ணுக்குத் தொல்லை தரக் கூடாது என்று அடக்குபவர்கள் அதிகம். இதை மனிவி புரிந்து கொள்ளாத  பட்சத்தில், மனைவி மீது வெறுப்பு ஏற்படுவது தவிர்க்கமுடியாது. எனவே ஆண்களின் மனநிலை அறிந்து பெண்கள் ஒத்துழைக்க வேண்டும்.

அடிக்கடி உடலுறவு வைத்துக்கொள்ள விரும்பும் பெண்களும் உண்டு. அவர்களது விருப்பத்தை ஆண்கள் உதாசினப்படுத்தாமல் முடிந்தவரை நிறைவேற்ற முயற்ச்சிக்க வேண்டும். செக்ஸ் இணைய தளங்களை பார்ப்பது, செக்ஸ் புத்தகத்தை படிப்பது, சிடி பார்ப்பது போன்றவை என்றாவது ஒருநாள் என்றல் ஏற்றுக்கொள்ள கூடியதே. ஆனால், அது இல்லாமல் உறவு கொள்ள முடியாது என்ற நிலை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் தம்பதிகள் தெளிவாக இருக்கவேண்டும்.

தம்பதிய உளவை அதிகரிக்கும் சக்தி கீரை மற்றும் பலன்களுக்கு உண்டு. மீன் புறா வெள்ளாட்டுக்கறி இறால் போன்றவை மிகவும் நல்லது. பேரிச்சம்பழம், பாதம் பருப்பு, பசும்பால் போன்றவையும் ஆண் - பெண் உறவுக்கு வலிமையும் இனிமையும் சேர்க்கக் கூடியவை.

ஆண்களை விட பெண்களே செக்ஸ் பசி கொண்டவர்களா ?

கலவியில் ஆண்கள்தான் அகோர செக்ஸ் பசி கொண்டவர்கள், அடக்க முடியாத செக்ஸ் விருப்பம் கொண்டவர்கள், முரட்டுத்தனமானவர்கள் என்று இதுவரை கருதப்பட்டு வந்தது. ஆனால் அதை விட பலமடங்கு வேகம் கொண்டவர்கள் பெண்கள்தான் என்று ஒரு புது நூலில் ஆய்வுப் பூர்வமாக கூறியுள்ளனர்.

மேலும் செக்ஸ் விஷயத்தில் பெண்களிடம் விலங்குகளின் குணம் இருப்பதாகவும், அடங்காத பெரும் பசி கொண்டவர்கள் பெண்கள் என்றும் அந்த நூல் கூறுகிறது. அறிவியல் பூர்வமான ஆய்வின் மூலம் இந்த முடிவுகளை வெளியிடுவதாகவும் அந்த நூலில் தெரிவித்துள்ளனர்.

ஆண்களை விட சக்தி ஜாஸ்தி

பெண்களின் செக்ஸ் உணர்வானது ஆண்களுக்கு சற்றும் குறைந்ததில்லை என்பது இந்த நூலின் ஆசிரியர் டேணியல் பெர்க்னரின் வாதமாகும். ஆண்களை விட அதிக அளவிலான செக்ஸ் சக்தி கொண்டவர்கள் பெண்கள் என்று கூறுகிறார் டேணியல்.

கலாச்சாரம் தடுக்கிறதே

ஆண்களை விட அதிகஅளவிலான உணர்ச்சிகளையும், ஆசையையும் கொண்டிருந்தாலும் பெண்கள் அமைதியாகவும், அடக்கமாகவும் தங்களது ஆசைகளை வைத்துக் கொள்வதற்கு அவர்கள் சார்ந்த சமூகத்தின் கலாச்சாரக் கட்டுப்பாடுகள் தடுப்பதாகவும் கூறுகிறார் டேணியல்.

விலங்குகளை விடஅதி வேகம் கொண்டவர்கள்

செக்ஸ் விஷயத்தில் வேகம் எடுக்க பெண்கள் முடிவு செய்துவிட்டால் விலங்குகளை விட அதி வேகமாக செயல்படுவார்களாம். அதி தீவிரமான செக்ஸ் வேட்கையையும் செயல்பாட்டையும் வெளிப்படுத்துவார்களாம்.

ஆண்களால் தாங்க முடியாது

பெண்கள் தங்களது செக்ஸ் இச்சையை தீர்க்க முழுமையாகவும், தீவிரமாகவும் களம் இறங்கி விட்டால் அதைத் தாங்க முடியாமல் ஆண்கள் துவண்டு போய் விடுவார்கள் என்றும் டேணியல் பீதி கிளப்புகிறார்.

அடக்கப்பட்ட உணர்ச்சிகள்

பெண்களைப் பொறுத்தவரை சமூகத்திற்குக் கட்டுப்பட்டவர்களாக உள்ளனர். தாங்கள் சார்ந்த கலாச்சாரம் குறித்து பயப்படும் நிலையில் அவர்கள் வைக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக அவர்களின் செக்ஸ் உணர்ச்சிகள் அடக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. அல்லது தங்களது கலாச்சார, சமூக நிலைக்கேற்ப தங்களை மாற்றிக் கொள்ளும் நிலைக்குப் பெண்கள் தள்ளப்படுகின்றனராம்.

முழுசா வெளிப்பட்டால்

பெண்களின் செக்ஸ் ஆர்வத்தையும், வேட்கையையும், விலங்குகளுன் ஒப்பிடுகிறார் டேணியல். காரணம், விட்டால் அல்லது வாய்ப்பு கிடைத்தால் அந்த அளவுக்கு அதி தீவிரமாகவும், வேகமாகவும் செயல்படுவார்களாம் பெண்கள். மேலும் அடங்காப் பசி என்று சொல்லும் அளவுக்கு எத்தனை முறை ஈடுபட்டாலும் பெண்களின் செக்ஸ் பசி அடங்காத ஒன்றாகும் என்றும் டேணியல் சொல்கிறார்.

நடப்பு வேறு.. உண்மை வேறு

தற்போது பெண்கள் வெளிப்படுத்தி வரும் செக்ஸ் உணர்வுகள் நிஜமானவை அல்ல.உ ண்மையில் அவை அடக்கப்பட்டவை. நிஜத்தில் பெண்கள் விஸ்வரூபம் எடுத்தால் மிகப் பிரமாண்டமானதாக இருக்கும் என்பதும் டேணியலின் கூற்றாகும்.

கை மருத்துவத்தில் சிறந்தது சுக்கு

சுக்குடன் சிறிது பால் சேர்த்து, மைய்யாக அரைத்து, நன்கு சூடாக்கி, இளஞ்சூடான பதத்திற்கு ஆறினதும், வலியுள்ள கை, கால் மூட்டுகளில் பூசிவர  மூட்டுவலி முற்றிலும் குணமாகும். சுக்கைத் தூள் செய்து, எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்தால் பித்தம் விலகும். சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி,  சித்தரத்தை இவ்வைந்தையும் இட்டு கஷாயம் செய்து பருகிவர, கடுஞ்சளி மூன்றே நாட்களில் குணமாகும்.

சிறிது சுக்குடன், ஒரு வெற்றிலையை மென்று தின்றால், வாயுத்தொல்லை நீங்கும். சுக்கு, வேப்பம்பட்டை போட்டு கஷாயம் செய்து குடித்துவர,  ஆரம்பநிலை வாதம் குணமாகும். சுக்குடன் சிறிது நீர் தெளித்து, விழுதாக அரைத்து, நெற்றியில் தடவினால் தலைவலி வந்தவழியே போய்விடும்.

சுக்கு, கருப்பட்டி, மிளகு சேர்த்து, "சுக்கு நீர்" காய்ச்சிக் குடித்து வர உடல் அசதி, சோர்வு நீங்கி சுறுசுறுப்பு ஏற்படும். சுக்குடன், தனியா வைத்து சிறிது  நீர் தெளித்து, மைய்யாக அரைத்து உண்டால், அதிக மது அருந்திய போதை தீர்ந்து இயல்பு நிலை ஏற்படும். சுக்கோடு சிறிது வெந்தயம் சேர்த்துப்  பொடியாக்கி, தேனில் கலந்து சாப்பிட்டால், அலர்ஜி தொல்லை அகலும்.

சுக்கு, மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து கஷாயம் செய்து காலை, மாலை குடித்துவர மாந்தம் குணமாகும். சுக்குடன், சிறிது துளசி இலையை மென்று  தின்றால், தொடர் வாந்தி, குமட்டல் நிற்கும். சுக்குடன், மிளகு, சுண்ணாம்பு சேர்த்து மைய்யாக அரைத்துப் பூசிவர, தொண்டைக் கட்டு மாறும். குரல்  இயல்பு நிலைபெறும்.

சிறிது சுக்குடன், சின்ன வெங்காயத்தை வைத்து அரைத்துச் சாப்பிட்டால், மலக்குடலில் உள்ள தீமை தரும் கிருமிகள் அழியும். சுக்குடன்,  கொத்தமல்லி இட்டு கஷாயம் செய்து பருகினால் மூலநோய் தீரும். சுக்கு, ஐந்து மிளகு, ஒரு வெற்றிலை சேர்த்து மென்று தின்று, ஒரு தம்ளர் நீர்  குடித்தால் தேள், பூரான் கடி விஷம் முறியும்.

சுக்கு, அதிமதுரம் இரண்டையும் தூள் செய்து, தேனில் கலந்து சாப்பிட்டுவர குற்றிருமல் குணமாகும். தயிர்சாதத்துடன், சிறிது சுக்குப்பொடி இட்டு  சாப்பிட்டால், வயிற்றுப்புண் ஆறும். சுக்கு , மிளகு, பூண்டு, வேப்பிலை இவைகளைச் சேர்த்து கஷாயம் செய்து, தினம் மூன்று வேளை வீதம் இரண்டு  நாட்கள் குடித்துவர விஷக்காய்ச்சல் குறையும்.

வயிற்றில் உள்ள கிருமிகளால் குழந்தை வளர்ச்சி பாதிக்குமா?

 எண்டோஸ்கோபி சிகிச்சையைப்பற்றிய கேள்விகளுக்கு கோவை என்.ஜி. மருத்துவமனையின் நிறுவனர் மற்றும் லேபராஸ்கோபி மற்றும் எண்டோஸ்கோபி சிகிச்சை நிபுணர் டாக்டர். மனோகரன் பதில் அளிக்கிறார்.

அஜீரணக்கோளாறுக்கும் வயிற்றுவலிக்கும் தொடர்புள்ளதா?
வயிற்றில் புண் இருந்தால் அஜீரணக்கோளாறு ஏற்படும். வலியானது மேல் வயிற்றிலிருந்தால் புண்ணினால் ஏற்படும் வலியாக இருக்கக்கூடும். அடிவயிற்று வலியாக இருந்தால் வேறு ஏதேனும் பிரச்னையாக இருக்கக்கூடும். உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.

வயிற்றில் உள்ள கிருமிகளால் குழந்தைகளின் வளர்ச்சி பாதிக்கப்படுமா?

ஆம். வயிற்றிலுள்ள கிருமிகள் குழந்தைகள் உண்ணும் உணவிலிருக்கும் சத்து மற்றும் வைட்டமின்களை உறிஞ்சிவிடும். அதனால் குழந்தைகளின் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும். எனவே, குழந்தைகளுக்கு தொடர்ச்சியாக மருத்துவ ஆலோசனையின்படி பூச்சி மருந்து கொடுக்க வேண்டும். கை, கால்களை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

வெளியூரில் பணியாற்றி வருகிறேன். 3 வேளையும் ஓட்டல்களில் காரசாரமாக சாப் பிட்டு வருகிறேன். வயதான காலத்தில் பாதிப்பு ஏதேனும் ஏற்பட வாய்ப்புள்ளதா?

ஓட்டல்களில் உபயோகிக்கப்படும் ஏற்கனவே உபயோகித்த எண்ணெய், சுத்தமில்லாத மசாலா மற்றும் சுகாதாரமில்லாமல் சமைக்கப்படும் உணவுப்பொருட்களை அடிக்கடி உண்ணும்போது வயிற்றில் புண் மற்றும் கேன்சர் உருவாக வாய்ப்பிருக்கிறது. எனவே, வீட்டு முறைப்படி சமைக்கும் உணவகத்திலோ அல்லது முடிந்தால் நீங்களாகவே சமை த்தோ உண்பது நல்லது.

கோதுமை சப்பாத்தியை விட மைதா ரொட்டி குடலுக்கு ஆபத்தா?

கோதுமை உடலுக்கு நல்லது. மைதாவை அடிக்கடி உண்பதால் கணையத்தை பாதிக்க வாய்ப்பிருக்கிறது. சில சமயங்களில் வயிறு உப்பிக்கொள்ளும். எனவே மைதா உணவை அடிக்கடி உண்பதை தவிர்ப்பது நல்லது.

குடல் இறக்கம் குழந்தைகளுக்கு வர வாய்ப்பிருக்கிறதா?

குடல் இறக்கம் குழந்தைகளுக்கும் ஏற்படுவதுண்டு. நாட்களை தள்ளிப்போடாமல் சிறு வயதிலேயே அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்வது நல்லது.
குடற்புண்கள் ஆற கீரை வகை நல்லதா? பழங்கள் நல்லதா?

இரண்டுமே நல்லது தான். சுக்கட்டி கீரை போன்ற அனைத்து கீரை வகைகளும் நல்லது. குடற்புண் உள்ளவர்கள் பழங்களில் சிட்ரிக் அமிலங்கள் உள்ள பழங்களை தவிர்த்து மற்ற பழங்களை சேர்த்துக்கொள்ளலாம். ஏனென்றால் சிட்ரிக் அமிலம் உள்ள பழங்கள் புண்ணை அதிகப்படுத்தும்.
அசைவ உணவு செரிமானம் செய்வதற்காக மது அருந்தும் பழக்கம் சரியா? தவறா?


நம் வயிறு என்ன செத்த உடலை புதைக்கும் சுடுகாடா? வயிறே உன்னை ஆராதிக்கிறேன் என்று நம் வயிற்றிற்கேற்றாற்போல சைவ உணவை உண்பது தான் சிறந்தது. அசைவ உணவினால் புட் பாய்சன் போன்ற உபாதைகள் வருகிறது. எனவே அசைவ உணவே கெடுதல் விளைவிக்கும். அதிலும் மது அருந்துவது மிகவும் அதிகமான கெடுதலை விளைவிக்கும்.

புகையிலை, குட்கா பழக்கம் குடலை பாதிக்குமா?

புகையிலை, குட்கா மற்றும் பான்மசாலா போன்ற பொருட்களால் வாய், தொண்டை மட்டுமல்லாமல் குடலையும் பாதிக்கும். சில சமயம் கேன்சர் வருவதற்கும் வாய்ப்பிருக்கிறது.

சிறுகுடலை விட பெருங்குடல் நீளமானதா?

ஆம். சிறுகுடலை விட பெருங்குடல் நீளமானது தான். சிறுகுடலானது வயிற்றிலிருந்து டியோடினம் என்னும் பகுதிவரை உள்ளது. அதற்குப் பின் பெருங்குடல் உள்ளது.

பேதி மாத்திரைகள் உண்மையிலேயே குடலை சுத்தம் செய்கிறதா?

பேதி மாத்திரைகள் குடலை கழுவி சுத்தம் செய்கிறது. முன்பெல்லாம் பேதி மாத்திரை குடலிலுள்ள பொருட்கள், கிருமிகள் அனைத்தையும் வெளியேற்றி சுத்தப்படுத்தும். ஆனால், தற்போது வயிற்றிலுள்ள கிருமிகளை கொன்று பின்பு அனைத்தையும் வெளியேற்றுகிறது.

துணையை கவரும் மசாஜ் விளையாட்டு

உடலும் மனதும் உற்சாகமாக இருந்தால் மட்டுமே தாம்பத்ய விளையாட்டினை ஆர்வமாக விளையாட முடியும். எந்த சிக்கலும் இன்றி ரிலாக்ஸ் ஆக இருக்க முதலில் அதற்கேற்ப மூடுக்கு கொண்டுவரவேண்டும். உடலையும் மனதையும் ரிலாக்ஸ் செய்வதில் மசாஜ் முக்கிய பங்கு வகிக்கிறது. மசாஜ் மூலம் உச்சந்தலைமுதல் உள்ளங்கால் வரை ஒவ்வொரு செல்லையும் உணர்ச்சியூட்ட முடியும். மசாஜ் செய்வது சாதாரணமாக எல்லோருக்கும் கைவந்து விடாது அது ஒரு கலை அதை எவ்வாறு கையாளவேண்டும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர் படியுங்களேன்.

மென்மையான படுக்கை

இரவோ, பகலோ உறுத்தல் இல்லாத மென்மையான வெளிச்சத்தில் படுக்கை அறை இருக்கவேண்டும். அதில் யாருக்கு மசாஜ் தேவையோ அவர்களை ரிலாக்ஸ் ஆக படுக்கவைத்து உள்ளாடைகளை மட்டும் அணிந்து கொள்ளுமாறு செய்துவிட்டு தேவையற்ற ஆடைகளை களையுங்கள். பஞ்சு மெத்தையைவிட தண்ணீர் படுக்கை இருந்தால் மசாஜ்க்கு மிகவும் ஏற்றது. கழுத்து, முழங்கால், உள்ளிட்ட இடங்களில் சற்றே தூக்கலாக தலையணையை வைத்துவிடுங்கள்.

வாசனையான எண்ணெய்

மசாஜ் செய்வதற்கு சிலர் வாசனை எண்ணெயை பயன்படுத்துவார்கள். சிலர் வெறும் கையையே பயன்படுத்தி உணர்ச்சியை உற்சாகமாக தூண்டுவார்கள். எண்ணெயை மெதுவாக சூடு படுத்திவைத்துக்கொள்வது நல்லது. அது தசைப்பிடிப்பையும், அழுத்தத்தையும் நீக்கும்.

மென்மையான இசை

படுக்கை அறையில் மெல்லிய வெளிச்சம் எந்த அளவிற்கு முக்கியமோ அதேபோல மென்மையான இசையை கசிய விடுங்கள். அது இருவரையுமே உற்சாகப்படுத்தும்.

சரியாக தொடங்குங்கள்

எந்த ஒரு செயலையும் சரியாக தொடங்கினாலே பாதி வெற்றி கிடைத்துவிடும். மசாஜ் செய்வதும் அப்படித்தான் எங்கே தொடங்கி எப்படி முடிக்கிறோம் என்பதில்தான் வெற்றியின் சூட்சுமமே இருக்கிறது. மென்மையான கைகள்தான் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. உங்கள் துணைக்கு தலையில் தொடங்குவது பிடிக்கும் எனில் உச்சந்தலையில் இருந்து தொடங்குங்கள். கால்களில் தொடங்குவது வசதி எனில் கால்களில் இருந்து மென்மையாய் ஆரம்பியுங்கள். பின்னர் ஒவ்வொரு பகுதியையும் தனித்தனியாக போகஸ் செய்து மென்மையாக பிடித்து விடுங்கள். உடம்பின் ஒவ்வொரு செல்லும் உங்களின் மென்மையை உணரவேண்டும். வேறு எதுவும் வேண்டாம். நீங்கள் மசாஜ் செய்வதே உங்கள் துணையை ஆகாயத்தில் பறக்கச் செய்யும்.

சரியாக சொல்லுங்கள்

தோள் பட்டை பகுதியிலோ, முதுகுப் பகுதியிலோ கூடுதலாக மசாஜ் செய்யவேண்டும் என்று விரும்பினால் அதை உங்கள் துணையிடம் கூறலாம். அந்த இடத்தில் வலி இருக்கிறது. இன்னும் கொஞ்சம் அழுத்தம் கொடுத்தால் நன்றாக இருக்குமே என்று சொல்லுங்கள். முதுகுப் பகுதியில் மசாஜ் செய்யும் போது துணையின் மீது ஏறி அமர்ந்து கூட செய்யலாம் அது கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தும்.

மசாஜ் செய்வது சாதாரணமாக எல்லோராலும் செய்து விட முடியாது அதற்கென நிபுணர்கள் இருக்கின்றனர். மசாஜ் பார்லர்களும் இருக்கின்றன. அங்கெல்லாம் சென்றால் செலவு பழுத்துவிடும் சரியான சுகமும் கிடைக்காது. எனவே வீட்டிலேயே உங்கள் துணையிடமே மசாஜ் செய்து கொள்வதுதான் செலவில்லாததும், பாதுகாப்பானதும் கூட என்கின்றனர் நிபுணர்கள்.

பழைய சாதத்தில் பலம் இருக்கு

முதல் நாள் தண்ணீர் ஊற்றி வைத்து விட்டு மறுநாள் நாம் சாப்பிடும் இந்த பழைய சாத்தில் தான் பி6 பி12 அதிகமாக இருக்கிது என் கூறுகின்றனர்  அமெரிக்க மருத்துவர்கள். குறிப்பாக நமது உடலின் சிறுகுடலுக்கு நன்மை செய்யும் ட்ரில்லியன்ஸ் ஆஃப் பாக்டீரியாஸ் அதிகமாகி நமது உணவுப்  பாதையை ஆரோக்கியமாக வைத்திருக்கிறதாம்.

பொதுவாக கிராமத்தில் கஞ்சி சாப்பிடும்போது கஞ்சியுடன் வெங்காயம் சேர்த்து சாப்பிடுவது தான் வழக்கம். சிறிய வெங்காயத்தை சேர்த்து  சாப்பிடும்போது நோய் எதிர்ப்பு சக்தி பெருகுவதால் வைரஸ் காய்ச்சல் என எந்த ஒரு காய்ச்சலும் நம்மை அணுகாது. பழைய சாதத்தில் என்ன பயன்  இருக்கிறது என்று தெரிந்து கொள்வோம்.

இரவு வேளையில் தண்ணீர் ஊற்றி வைப்பதால் சாதத்தில் அதிகளவு நல்ல பாக்டீரியாக்கள் உருவாகுகிறது. இதனை காலை வேளை உணவாக  எடுத்துக்கொள்வதால் உடல் லேசாகவும் அதே சமயம் சுறுசுறுப்பாகவும் இருக்கிறது. மேலும் உடல் சூட்டை தணிப்பதோடு குடல்புண், வயிற்றுவலி,  போன்றவற்றையும் குணப்படுத்துகிறது.. இந்த பணியோடு நின்றுவிடாமல் நார்ச்சத்து, மலச்சிக்கல், பிரச்சனைகளை தீர்த்து உடலை சீராக இயங்கச்  செய்கிறது..

உடலை சோர்விலிருந்து மீட்டு சுறுசுறுப்பாக இயங்கச்செய்யும். அதற்காக சூடாக தயாரித்த சாதத்தில் தண்ணீரை ஊற்றி சாப்பிடக்கூடாது. முதல் நாள்  இரவு மீந்த சோற்றை எடுத்து நல்ல தண்ணீர் ஊற்றி முடிவிட வேண்டும். மறுநாள் சாப்பிடும் முன் சாதத்தை நன்கு பிழிந்து மோர் சேர்த்து வெங்காய்  வைத்து சாப்பிடலாம்.