Sunday, July 28, 2013

விரதம் ஏன் எது எப்படி எப்போது?

‘வயிறு நிறைந்திருக்கும்போது விரதம் பற்றி யோசிப்பதும் பேசுவதும் சுலபம்’ என்பார்கள். அது எவ்வளவு உண்மை என்பது உணர்ந்தவர்களுக்குத்  தெரியும். பெண்களையும் விரதத்தையும் பிரிக்க முடிவதில்லை. எந்தக் கடவுளும் பட்டினி இருந்து, தன்னை வேண்டச் சொல்வதில்லை. ஆனாலும்,  பெண்கள் தம்மை வருத்தி, உணவைத் தவிர்த்து, பசியை சகித்துக் கொள்கிற விரதங்கள், அவர்களது பிரார்த்தனையின் முக்கிய அங்கம். கடவுளின்  பெயரைச் சொல்லிக் கடைப்பிடித்தாலும், விரதம் என்பது ஆரோக்கிய வாழ்க்கைக்கு அவசியமான ஒன்றுதான்.

விரதம் என்பது மதத்துக்கு மதம், மக்களுக்கு மக்கள் வேறுபடுகிறது. சிலருக்கு ஒரு வேளை உணவு.... இன்னும் சிலருக்கு இருவேளை உணவு.  வெறும் பழங்களை சாப்பிடுவது, உப்பு தவிர்த்து இனிப்பு மட்டும் எடுத்துக் கொள்வது, அசைவம் மட்டும் தவிர்ப்பது... இப்படி விரதங்கள் பல விதம்.  ஏன் விரதமிருக்க வேண்டும்? எது சரியான விரதம்? யாரெல்லாம் விரதமிருக்கலாம்? விரதமிருக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள்  என்னென்ன? விரிவாகப் பேசுகிறார் உணவு மற்றும் ஊட்டச்சத்து ஆலோசகரான ஷைனி சந்திரன்.

‘‘நாம் உண்கிற உணவானது செரித்து, அதன் பிறகு அதிலுள்ள கொழுப்பு ஆற்றலாக மாற்றப்பட குறைந்தது 6 முதல் 8 மணி நேரம் தேவை. அந்த  நேரத்தை அனுமதிக்காமல், அதற்குள் அடுத்த வேளை சாப்பாட்டை உள்ளே தள்ளுவதால், உடலில் சேமிக்கப்பட்ட கொழுப்பானது, உடலியக்கத்துக்குத்  தேவையான ஆற்றலாக உபயோகப்படுத்தப்படுவது தடுக்கப்பட்டு, அப்படியே தேங்கிப் போகும். தினமுமே அடுத்த வேளை உணவுக்கு இடையில்  போதிய இடைவெளியை அனுமதிப்பது கூட ஒரு வகையில் விரதம்தான்...

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வாரம் ஒரு முறை விரதமிருப்பது சரியானது. சிலர் வாரம் இரண்டு முறைகூட விரதமிருப்பதுண்டு.
வாரத்தில் எல்லா நாள்களும் மூன்று வேளைகளும் வயிறு முட்ட சாப்பிட்டுப் பழகி விட்டு, திடீரென ஒரு நாள் விரதத்தைக் கடைப்பிடிப்பார்கள் சிலர்.  அது தவறு. விரதத்துக்கு இரண்டு நாள்களுக்கு முன்பிருந்தே காரம் குறைவான, பருப்பு, சாதம் மாதிரி நன்கு வெந்த உணவுகளையும், ரசம் சாதம்,  மோர் மற்றும் பழங்களையும் சாப்பிட வேண்டும்.

அடுத்த நாள், இளநீர், மோர், துளசி சேர்த்த தண்ணீர் மற்றும் பழச் சாறுகள் என திரவ உணவுகளாக சாப்பிடலாம். அதற்கடுத்த நாள், காலை மற்றும்  இரவு உணவுக்கு வெறும் பழங்களையும், மதிய உணவுக்கு மிதமான காரமற்ற உணவுகளையும் எடுத்துக் கொள்ளலாம். மூன்றாவது நாளில் இருந்து  வழக்கமான உணவுப்பழக்கத்துக்கு மாறலாம். இது ஒரு வகையான விரதம். இன்னொரு முறையில், மாலை வரை வெறும் பழங்களையும் திரவ  உணவுகளையும் மட்டும் எடுத்துக் கொண்டு, இரவுக்கு மிதமான உணவு சாப்பிடுகிற முறை.

இது தவிர இன்று விதம் விதமான விரத முறைகளைக் கடைப்பிடிக்கிறார்கள் மக்கள். சிலர் வெறும் பழங்களை மட்டுமே சாப்பிடுவார்கள். அப்படி  சாப்பிடும் போது, உடலுக்குள் போகும் உப்பின் அளவு குறைவாக இருக்கும். எனவே உடலில் தண்ணீர் சேராது. நடிகைகள், மாடல் போன்றவர்கள்,  போட்டோ ஷூட்டுக்கு முன்னால், 3 நாள்களுக்கு பழ விரதம்தான் இருப்பார்கள். அதன் விளைவாக அவர்களது முகத்தில் பொலிவு கூடும். உடலில்  தண்ணீர் தேக்கம் இருக்காது என்பதே காரணம்.

கண்களுக்கு அடியில் வீக்கமும் இருக்காது. இங்கிலாந்தில் இப்போது 5:2 டயட் என்பது ரொம்பப் பிரபலம். இதில் வாரம் 2 நாள்கள் விரதத்தைக்  கடைப்பிடிக்கிறார்கள். விரத நாளன்று ஆண்களுக்கு 600 கிலோ கலோரிகளும், பெண்களுக்கு 500 கிலோ கலோரிகளும் மட்டுமே அனுமதி. எடை  குறைக்க விரும்புகிற பலரும் இதையே பின்பற்றுகிறார்கள். வாரம் ஒரு முறை விரதமிருந்தாலே  உடலிலுள்ள நச்செல்லாம் வெளியேற்றப்பட்டு,  உடல் சுத்தமாகும்.

விரதத்தை முடிக்கும் போது பழரசம்  குடிப்பது ஏன்?


சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகள் போன்றவர்கள் உண்ணா விரதமிருக்கும் போது, கடைசியில் பழச்சாறு குடித்து, அதை முடிப்பதைப்  பார்த்திருக்கிறோம். அது ஏன் தெரியுமா? பழச்சாறு செரிமானமாவதில் சிக்கல் இருக்காது. அது விரைவில் ரத்தத்துடன் கலந்து, குளூக்கோஸுக்கு  இணையாக உடனடியாக உடலுக்கு சக்தியைக் கொடுக்கக் கூடியது. நீண்ட நேரம் உண்ணாமல் இருக்கும் போது, பழச்சாறு குடிப்பதன் மூலம் இழந்த  சக்தியை சுலபமாகத் திரும்பப் பெற முடிகிறது. பழங்களில் வைட்டமின்கள், கனிமங்கள் என எல்லாம் இருப்பதால், அது ஆரோக்கியமானதும்கூட.  விரதத்தை முடிக்கிற போது, பழச்சாறுதான் குடிக்க வேண்டும் என்றில்லை. இளநீர் கூட மிக நல்லது.

விரதமிருக்கும் போது தவிர்க்க வேண்டிய  உணவுகள் எவை?

செரிமானத்துக்குக் கடினமான எந்த உணவும் விரத நாள்களில் தவிர்க்கப்பட வேண்டும். பால், மசாலா சேர்த்த உணவுகள், அசைவம், அரிசி மற்றும்  கோதுமை உணவுகள், அதிக உப்பு, காரம் சேர்த்த உணவுகள், செயற்கை உணவுகள் கூடவே கூடாது. செரிமானத்துக்கு மெனக்கெடுவதைத் தவிர்த்து,   உள் உறுப்புகளை சுத்தம் செய்வதற்கு உடல் அந்த நேரம் எடுத்துக் கொள்ளும். முதுமை தள்ளிப் போகும். இன்சுலின் எதிர்ப்பு சக்தி மேம்படும். விரத  நாள்களில் மிதமான, பாதகமில்லாத உணவுகளை எடுத்துக்
கொள்வதன் விளைவாக, ஆரோக்கியம் மேம்படுவதுடன், ஆயுளும் கூடும்.

விரதம் இருந்தால் உடல் இளைக்குமா?


விரதமிருக்கும் போது பெரும்பாலும் பழங்கள் அல்லது திரவ உணவுகளையே எடுத்துக் கொள்கிறோம். அரிசி சாதம், ரொட்டி, இட்லி, தோசை, சட்னி,  ஊறுகாய், அப்பளம், காரசார புளியோதரை, காரக்குழம்பு போன்றவை தவிர்க்கப்படுவதால் உடலில் தண்ணீர் சேர்வதும் தவிர்க்கப்படுகிறது. நமது   உடலானது தசைப்பகுதிகளில் தண்ணீரைச் சேர்த்து வைத்திருக்கும். கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை உண்ணும்போது, அவற்றில் உள்ள  உப்பும், தன் பங்குக்கு தண்ணீரை சேமிக்கும். எனவே விரதமிருக்கும் போது எடை பார்த்தால், அதில் சில கிலோ குறைவாகத்தான் காட்டும். ஆனால்,  அது கொழுப்பு கரைந்ததாக அர்த்தமாகாது!

விரதத்தை முடித்து விட்டு விருந்து சாப்பிடலாமா?

அது அத்தனை மணி நேரம் விரதம் இருந்த பலனையே கெடுத்து விடும். விரதம் என்பது உணவு சார்ந்த ஒருவித ஒழுக்கக் கட்டுப்பாடு. குறைந்த  கலோரி உணவுகளை உண்ணும்போது, ஆயுள் அதிகரிக்கிறது. அதன் விளைவாக முதுமைத் தோற்றமும் தள்ளிப்போடப்படுகிறது. எனவே, விரதத்தை  முடித்த பிறகும், மிதமான உணவுகளை அளவோடு எடுத்துக் கொள்வதுதான் நல்லது.

யாரெல்லாம் விரதம் இருக்கக் கூடாது?


குழந்தைகள், டைப் 1 நீரிழிவு பாதிக்கப்பட்டவர்கள், கர்ப்பிணிகள்... தசை நலிவு நோயால் (சிறீவீஸீவீநீணீறீ னீஹ்ஷீஜீணீtலீஹ்)  பாதிக்கப்பட்டோர்...

சுவாச பிரச்சனைகளைத் தீர்க்கும் யூக்கலிப்டஸ்

அனைவருக்கும் யூக்கலிப்டஸ் எண்ணெய்யின் பயன்பாடு மற்றும் நன்மைகள் பற்றி தெரியும். நூற்றாண்டுகளுக்கு மேலாக ஆரோக்கிய சிகிச்சைக்காக இதன் எண்ணெய்யை பயன்படுத்தி வருகிறார்கள். யூக்கலிப்டஸ் மரங்களில் இருந்து ஆஸ்திரேலியாவால் முதன்முதலாக எண்ணெய் தயாரிக்கப்பட்டது. பல அத்தியாவசிய எண்ணெய்கள் சிறந்த நன்மைகளை கொண்டிருந்தாலும் இது இன்னும் தனிப்பட்ட பல நலன்களைகொண்டிருக்கிது யூக்கலிப்டஸ் எண்ணெய்.

யூக்கலிப்டஸ் எண்ணெய் தோல் மற்றும் அழகு பராமரிப்பிற்கு உபயோகப்படுத்தப்படுகிறது. யூக்கலிப்டஸ் எண்ணெய் மாற்று மற்றும் சிகிச்சைமுறை காரணமாக பெரும்பாலும் முதலுதவி மருந்தாகப் பயன்படுகிறது. இது கொப்புளங்கள், சிறு காயங்கள், வெட்டுக்கள், மற்றும் சிராய்ப்புகளையும் குணமாக்க பயன்படுத்தப்படுகிறது. யூக்கலிப்டஸ் எண்ணெய் தோல் எரிச்சல், பூச்சி கடி, தசை வலி நிவாரணத்துக்கு உதவுகிறது.

சுவாச பிரச்சனைகள்


இன்றைய சூழலில் பலர் ஆஸ்துமா பிரச்சனையால் அவதிபடுகின்றனர். ஆஸ்துமா, மார்பு சளி அல்லது நெரிசல் போன்ற சுவாச பிரச்சினை இருந்தால், யூக்கலிப்டஸ் எண்ணெய்யை பயன்படுத்தலாம். சூடான நீரில் கொஞ்சம் யூக்கலிப்டஸ் எண்ணெய்யை சேர்த்து பருகினால் இரத்தசோகை, எதிர்ப்பு அழற்சி போன்ற பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுகிறது.
 
தசை வலி நிவாரணம்


தசை வலியால் அவதி படுபவர்களுக்கு யூக்கலிப்டஸ் எண்ணெய்யை உதவுகிறது.. நீங்கள் வெறுமனே பாதிக்கப்பட்ட பகுதியில் அதாவது தசைகளில் வலி ஏற்படும் இடங்களில் யூக்கலிப்டஸ் எண்ணெய்யை போட்டு மஸாஜ் செய்வது போல தேய்க்க வேண்டும். கடினமான தசைபுண், சுளுக்கு, தசைநார், நரம்புகளில் வலி போன்ற தீவிர பிரச்சனைகள் அனைத்திற்கும் யூக்கலிப்டஸ் ஆயிலை தேய்த்து மஜாஸ் செய்தால் தசை வலியிலிருந்து குணம் பெறலாம்.

காய்ச்சல்


காய்ச்சல் என்றால் உடல் அதிக வெப்பமுடன் இருக்கும். யூக்கலிப்டஸ் எண்ணெய் உடலில் உள்ள வெப்பநிலையை குறைக்க பயன்படுகிறது. யூக்கலிப்டஸ் எண்ணெய்க்கு பொதுவாக காய்ச்சல் எண்ணெய் என்ற பெயரும் உள்ளது.

குடல் புழுக்கள்

யூக்கலிப்டஸ் எண்ணெய் ஒரு புழுக்கொல்லி மற்றும் குடல் கிருமிகள் நீக்க பயன்படுத்தப்படுகிறது. மேலும் நீரிழிவு உள்ளவர்கள் யூக்கலிப்டஸ் எண்ணெய்யை உட்கொண்டால் ரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவு கட்டுபடுத்தபடும். யூக்கலிப்டஸ் எண்ணெய் அடிக்கடி தோல் நோய் சிகிச்சைக்காக குறிப்பிட்ட இடத்தில் பயன்படுத்தப்படுத்தலாம்..

மலட்டுத்தன்மையை போக்கும் தேனீயின் மகரந்தம்

தேனீயின் மகரந்தமானது உலகம் முழுவதும் மருத்துவத்திற்கு பயன்படுத்தப்படும் ஒரு சிறந்த மருந்தாகும். தேனீயின் மகரந்தமானது பெரிய  தேனீக்களின் மூலம் உருவாக்கப்பட்டு இளம் தேனீக்களை வளர்க்க மகரந்தத்தை உணவாக வழங்குகிறது. இயற்கையின் மிக முக்கியமான  ஊட்டமளிக்கும் உணவாக கருதப்படுகிறது. இந்த மகரந்த உணவானது மனிதனுக்கு தேவைப்படும் அனைத்து ஊட்டச்சத்துகளையும் கொண்டுள்ளது.  தேனீ சேகரிக்கும் மகரந்தத்தில் புரதம் சுமார் 40%, இலவச அமினோ அமிலங்கள், பி காம்ப்ளக்ஸ் வைட்டமின், ஃபோலிக் அமிலம்  போன்றவை  நிறைந்துள்ளது.

தேனீயின் மகரந்தம் முழுமையான இயற்கை உணவு, இதில் முழுமையாகவே விலங்கு சம்பந்தப்பட்ட சிறு பொருட்களைக் கூட கொண்டிருக்காது. மகரந்தமானது விலங்குகளின் மூல ஆதாரங்களை விட புரதங்களை அதிகம் கொண்டுள்ளது அதாவது இதில் மாட்டிறைச்சி, முட்டை, சீஸ் போன்றவற்றை விட அதிக அமினோ அமிலங்களை கொண்டுள்ளது. இதன் புரதத்தில் பாதிக்கு மேலாக அமினோ அமிலங்களை கொண்டுள்ளதால் அப்படியே பயன்படுத்தலாம். ஒரு டீஸ்பூன் மகரந்தத்தை தயாரிக்க ஒரு நாளைக்கு எட்டு மணி நேரத்தை செலவிடுகிறது. ஒரு டீஸ்பூன் மகரந்தத்தில் 2.5 பில்லியன் தானியங்கள் உள்ளது.

ஆற்றலை வழங்கும்

தேனீயின் மகரந்தம் அதிக ஊட்டச்சத்துகளை கொண்டுள்ளதால் மனதனுக்கு தேவையான இயல்பான ஆற்றலை வழங்குகிறது. இதில்  கார்போஹைட்ரேட், புரதம், வைட்டமின் பி கொண்டுள்ளதால் உடல் உறுதியை மேம்படுத்தி சோர்வை நீக்கி நாள் முழுவதும் சுறுசுறுப்பை தருகிறது.

தோல் பராமரிப்பு

தேனீயின் மகரந்தம் தோலில் ஏற்படும் தடிப்பு, அலர்ஜி, எக்ஸிமா, பொதுவாக தோல் எரிச்சல்,  போன்றவற்றை சரிசெய்ய மேற்பூச்சி பொருட்களில்  பயன் படுத்தப்படுகிறது. இது அமினோ அமிலங்கள் மற்றும் வைட்டமின்கள் கொண்டுள்ளதால் தோலை பாதுகாத்து செல்களின் மறு உருவாக்கத்திற்கு  உதவுகிறது.

சுவாச அமைப்பு

நுரையீரல் திசுக்களின் காரணமாக உருவாகும் ஆரம்பகட்ட ஆஸ்துமாவை தடுக்கும். ஏனெனில் ஆஸ்துமாவை தடுப்பதற்க்கு தேவையான  ஆண்டியாக்ஸிடண்ட்களை அதிக அளவு கொண்டுள்ளது.  இருதய அமைப்புக்கு ஆதரவு புரிகிறது. ஆக்ஸிஜனேற்ற எதிர்பொருட்களை அதிகளவு  கொண்டுள்ளதால் இரத்த நாளங்கள், இரத்த ஓட்ட பிரச்சினைகள், கொழுப்பு அளவுகளை சரி செய்து இருதய அமைப்புக்கு ஆதரவு தருகிறது. மேலும்  பக்கவாதம், மாரடைப்பை தடுக்கிறது.

செரிமான அமைப்பு

இதில் ஆரோக்கியமான வைட்டமின்கள், தாதுக்கள், புரதம் ஆகியவற்றை கூடுதலாக கொண்டுள்ளதால் செரிமானத்தை சரிசெய்கிறது. ஏனெனில்  தேனீயின் மகரந்தம் செரிமானத்திற்கு உதவும் என்சைம்களை கொண்டுள்ளது. என்சைம்கள் நமது உடலுக்கு தேவையான அனைத்து  ஊட்டச்சத்துகளையும் கிடைக்க செய்கிறது.  மேலும் ஒவ்வாமைகளை குணப்படுத்தும் ஆற்றலையும் கொண்டுள்ளது..

மலட்டுத்தன்மையை

தேனீயின் மகரந்தம் கருப்பையின் செயல்பாட்டை தூண்டி முட்டைகளை மீளுருவாக்கும் செய்கிறது. எனவே கர்ப்பத்தை தூண்டுவதற்கு பெரிதும்  உதவுகிறது. இது ஒரு வகையிலான ஹார்மோன் பூஸ்டர், பாலுணர்வூக்கி எனவும் அழைக்கின்றனர்.  புரோஸ்டேட்க்கு உதவி புரிகிறது. அதாவது  புரோஸ்டேட் மிகைப்பெருக்கத்தால் பாதிக்கப்பட்ட ஆண்கள் தேனீயின் மகரந்தம் மூலம் நிவாரணம் காணலாம். மேலும் வீக்கத்தை குறைத்து சிறுநீர்  கழிப்பை அதிகப்படுத்துகிறது.

Sunday, July 21, 2013

மூச்சு இழுத்து விட்டால் தலைவலி பறந்து போகும்

வலது நாசியை சூரியகலை என்பர்
இடது நாசியை சந்திரகலை என்பர்
சூரியகலையை (வலது நாசி) மூடிக்கொண்டு சந்திரகலையால் (இடது நாசி) ஒரு ஐந்து நிமிடம் மூச்சு இழுத்து விட்டால் தலைவலி பறந்து போகும்....
அதே போல் இடது நாசியை மூடிக்கொண்டு வலதுநாசியால் மூச்சு இழுத்து விட்டால் உடம்பு அலுப்பு சரியாகும் ....

Tuesday, July 16, 2013

செரிமானக் கோளாறை போக்கும் ஓமம்

ஓமம் (ajwain) உடலில்  ஏற்படும் அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இந்த செடியின் அனைத்து பாகங்களும் யுனானி,  ஆயுர்வேத மருத்துவத்திற்கு முக்கியமானதாக பெரிதும் பயன்படுகிறது.. ஓமத்தின் விதைகளை மசாலா பொருளாக சமைப்பதற்குபயன் படுத்துகின்றனர். மேலும் பிஸ்கட், சாஸ், ரசங்கள், குளிர்பானங்கள், ஊறுகாய் போன்றவற்றை தயார் செய்யும் போது இதனை பயன்படுத்துகின்றனர். இதன் விதைகளைக் கொண்டு தேநீர் செய்து குடிக்கின்றனர். ஓமத்தால் ஏற்படும் உடல் நல நன்மைகள் என்ன என்று  பார்க்கலாம்.

வாயு வெளியேற்றம்:
வாயு பிரச்சனையிலிருந்து விடுபட 125 கிராம் தயிர், 2 கிராம் ஓமம், 1/2 கிராம் கருப்பு உப்பு, சேர்த்து சாப்பிட்டால் வாயு  சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் எளிதில் நீக்கி விடும் தன்மை கொண்டது. இதை மதிய உணவிற்கு பிறகு 10 முதல் 15 நாட்களுக்கு  தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் விக்கல், குமட்டல், உளறுதல் மற்றும் அஜீரணம் ஆகிய பிரச்சனைகளை தீர்க்கும்

செரிமானக் கோளாறு: சரியான முறையில் செரிமானம் ஆகாததால் செரிமானக்கோளாறு ஏற்பட்டு குடலில் புண் ஏற்படும். இந்த பிரச்சனைகளை  தவிர்க்க சாப்பிட்ட பிறகு ஓமத்தை எடுத்து வாயில் போட்டு மென்று கொள்வதால் செரிமான பிரச்சனைகளை தீர்க்க முடியும்..

ஈறுகளில் வீக்கம்: ஈறுகளில் வீக்கம் ஏற்பட்டு இருந்தால் ஓம எண்ணெய் ஒரு துளி அளவு சேர்த்து சில நிமிடங்களுக்கு பின் வாயில் ஊற்றி 5  நிமிடத்திற்கு பின் அலசிவிடவேண்டும். இப்படி செய்வதால் வாய் நாற்றம், ஈறுகளில் ஏற்பட்ட வீக்கம் அனைத்திலிருந்தும் நிவாரணம் பெறலாம்.

மூட்டு வலிகள்: ஓம(ணீழீஷ்ணீவீஸீ) எண்ணெய்யை கடுகு சேர்த்து சுடவைத்து மூட்டுவலி உள்ள இடங்களில் மஜாஜ் செய்வது போல நன்கு  தடவினால் மூட்டுவலிக்கு தீர்வு காணலாம்.

வலி மற்றும் காயங்கள் : ஓம விதைகளுடன் தண்ணீர், மஞ்சள் சேர்த்து பேஸ்ட் போல செய்து காயங்கள் ஏற்பட்ட இடத்தில் போட வலி மற்றும்  வீக்கங்கள் குணம் பெறும்.

வயிறு வலி: வயிற்று வலியால் அவதிப்படுவோர் சூடான தண்ணீரில் மிளகு 1 தேக்கரண்டி, ஓமம் 1 தேக்கரண்டி சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால்  வயிற்றுவலி குணமாகும். அரிப்பு, படை, எக்ஸிமா போன்றவைகளுக்கு கொதிக்கும் தண்ணீரில் ஓமத்தைப்போட்டு வெந்ததும் அதை பேஸ்ட்டாக  செய்து அரிப்பு ஏற்படும் இடத்தில் தடவ வேண்டும். இந்த பேஸ்ட்டை முகத்தில் ஏற்படும் பருக்களிலும் தடவலாம்.வ்

நல்லதோர் தாம்பத்தியம் நலமாகும் உடல் நலம்

தாம்பத்தியத்தில் வெற்றிக்கும், தொடர் வெற்றிக்கும் கணவன்- மனைவி இருவரின் உடல் நலமும், மன நலமும் முக்கியம். அதனால் அன்றாட உணவில் ஊட்டச்சத்துகள் நிறைந்த புரதம், கொழுப்பு, வைட்டமின்கள், தாதுப் பொருட்கள் நிறைந்த சைவ, அசைவ உணவுகளையும், காய்கறிகள், பழங்கள், கீரைகள் போன்றவற்றையும் சேர்த்துக்கொள்ளவேண்டும்.

எந்த சந்தர்பத்திலும் பாலியல் சக்தியை அதிகரிக்கும் என்று சொல்லும் போலி மருந்துகளை சாப்பிடக்கூடாது.

சாப்பிட்டதும், உடலுறவை வைத்துக்கொள்ளக் கூடாது. இதனால் முழுமையான இன்பம் கிடைக்காது. வயிற்றில் உணவு முழுமையாக இருந்தால் , செயல்பாடுகளில் ஆர்வம் கட்ட முடியாது.

உறவுக்கு முன், இனிமையான உரையாடலும், உணர்வு பரிமற்றலும், முன் விளையாட்டுகளும் இருக்க வேண்டும். அப்போது தான் உறவில் முழுமை பெற முடியும்.

தாம்பத்தியம் ஓர் இனிய சங்கீதம். இசைப்பதும், ரசிப்பதும் மென்மையாகவும் நிதானமாகவும் இருக்க வேண்டும். ஆவேசமும், அவசரமும் காட்டினால் தாம்பத்தியம் அரைகுறையாகவும் அலங்கோலமாகவும் ஆகிவிடும்.

கோபம், சண்டையைத் தீர்க்கக்கூடிய சக்தி செக்ஸ்க்கு உண்டு. ஆனால், மன மன ஒற்றுமை ஏற்படாமல் உடல்களால் மட்டுமே இயங்கி உடல் வேட்கையைத் தணிக்க முயற்சிப்பது நல்லதல்ல. மேலும், அழ்ந்த மன பாதிப்புகள் தம்பதிய உறவுக்குப் பெரும் எதிரியாகும்.

தாம்பத்தியத்தில் ஒரே மாதிரி செயலாற்றும் இயந்திரத் தனங்கள் இனிமை தராது. அதே நேரத்தில் அளவுக்கு மீறிய எல்லை எல்லா மீறல்களும் சிகல்களில் விட்டுவிடும்.

மனமும் உடலும் ஒத்துழைக்கும்  வரை  அடிக்கடி உளவு கொள்ள முடியும் என்றாலும், தம்பதிகள் தங்களுக்கும் சில கட்டுப்பாடுகள்  விதித்துக்கொண்டல், உறவு பற்றி ஆவலாக எதிர்பார்த்து காத்திருந்து இன்பம் அடைய முடியும்.

வயது அதிகரித்ததும், குழந்தை வளர்ந்ததும் தம்பதிய உளவு கொள்வது பாவம் என்று நினைக்கத் தேவையில்லை. இன்பம் தரும் உடலுறவுக்கு வயது ஒரு தடையில்லை.

கணவன் மனைவியின் அந்தரங்கமான இல்லற வாழ்வில் ஒருவர் விருப்பத்தை மற்றொருவர் புரிந்து கொள்ள வேண்டும்.

செக்ஸில்எதுவுமே தவறில்லை என்பதால் இப்படிப் பேசினால் அநாகரிகம், அப்படிச் செய்தால் அநாகரிகம் என்று என்ன தேவையில்லை. படித்தவர்கள், நல்ல வேளையில் இருப்பவர்கள் இது போன்று எல்லாம் செய்யக்கூடாது என்று தங்களுக்குள் கட்டுப்பாடு விதித்துக் கொள்ளக்கூடாது. இருவரது விருபங்களில் ஆரோக்கியமான அனைத்துமே, சுகமான அனைத்துமே பாலியல் வாழ்கை நெறிப்படி சரியானதுதான்.

தாம்பத்தியம்  ஒரே அலைவரிசையில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இருப்பதில்லை. ஆணுக்கும் அடிக்கடி ஏற்படும் என்றாலும், பெண்ணுக்குத் தொல்லை தரக் கூடாது என்று அடக்குபவர்கள் அதிகம். இதை மனிவி புரிந்து கொள்ளாத  பட்சத்தில், மனைவி மீது வெறுப்பு ஏற்படுவது தவிர்க்கமுடியாது. எனவே ஆண்களின் மனநிலை அறிந்து பெண்கள் ஒத்துழைக்க வேண்டும்.

அடிக்கடி உடலுறவு வைத்துக்கொள்ள விரும்பும் பெண்களும் உண்டு. அவர்களது விருப்பத்தை ஆண்கள் உதாசினப்படுத்தாமல் முடிந்தவரை நிறைவேற்ற முயற்ச்சிக்க வேண்டும். செக்ஸ் இணைய தளங்களை பார்ப்பது, செக்ஸ் புத்தகத்தை படிப்பது, சிடி பார்ப்பது போன்றவை என்றாவது ஒருநாள் என்றல் ஏற்றுக்கொள்ள கூடியதே. ஆனால், அது இல்லாமல் உறவு கொள்ள முடியாது என்ற நிலை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் தம்பதிகள் தெளிவாக இருக்கவேண்டும்.

தம்பதிய உளவை அதிகரிக்கும் சக்தி கீரை மற்றும் பலன்களுக்கு உண்டு. மீன் புறா வெள்ளாட்டுக்கறி இறால் போன்றவை மிகவும் நல்லது. பேரிச்சம்பழம், பாதம் பருப்பு, பசும்பால் போன்றவையும் ஆண் - பெண் உறவுக்கு வலிமையும் இனிமையும் சேர்க்கக் கூடியவை.

ஆண்களை விட பெண்களே செக்ஸ் பசி கொண்டவர்களா ?

கலவியில் ஆண்கள்தான் அகோர செக்ஸ் பசி கொண்டவர்கள், அடக்க முடியாத செக்ஸ் விருப்பம் கொண்டவர்கள், முரட்டுத்தனமானவர்கள் என்று இதுவரை கருதப்பட்டு வந்தது. ஆனால் அதை விட பலமடங்கு வேகம் கொண்டவர்கள் பெண்கள்தான் என்று ஒரு புது நூலில் ஆய்வுப் பூர்வமாக கூறியுள்ளனர்.

மேலும் செக்ஸ் விஷயத்தில் பெண்களிடம் விலங்குகளின் குணம் இருப்பதாகவும், அடங்காத பெரும் பசி கொண்டவர்கள் பெண்கள் என்றும் அந்த நூல் கூறுகிறது. அறிவியல் பூர்வமான ஆய்வின் மூலம் இந்த முடிவுகளை வெளியிடுவதாகவும் அந்த நூலில் தெரிவித்துள்ளனர்.

ஆண்களை விட சக்தி ஜாஸ்தி

பெண்களின் செக்ஸ் உணர்வானது ஆண்களுக்கு சற்றும் குறைந்ததில்லை என்பது இந்த நூலின் ஆசிரியர் டேணியல் பெர்க்னரின் வாதமாகும். ஆண்களை விட அதிக அளவிலான செக்ஸ் சக்தி கொண்டவர்கள் பெண்கள் என்று கூறுகிறார் டேணியல்.

கலாச்சாரம் தடுக்கிறதே

ஆண்களை விட அதிகஅளவிலான உணர்ச்சிகளையும், ஆசையையும் கொண்டிருந்தாலும் பெண்கள் அமைதியாகவும், அடக்கமாகவும் தங்களது ஆசைகளை வைத்துக் கொள்வதற்கு அவர்கள் சார்ந்த சமூகத்தின் கலாச்சாரக் கட்டுப்பாடுகள் தடுப்பதாகவும் கூறுகிறார் டேணியல்.

விலங்குகளை விடஅதி வேகம் கொண்டவர்கள்

செக்ஸ் விஷயத்தில் வேகம் எடுக்க பெண்கள் முடிவு செய்துவிட்டால் விலங்குகளை விட அதி வேகமாக செயல்படுவார்களாம். அதி தீவிரமான செக்ஸ் வேட்கையையும் செயல்பாட்டையும் வெளிப்படுத்துவார்களாம்.

ஆண்களால் தாங்க முடியாது

பெண்கள் தங்களது செக்ஸ் இச்சையை தீர்க்க முழுமையாகவும், தீவிரமாகவும் களம் இறங்கி விட்டால் அதைத் தாங்க முடியாமல் ஆண்கள் துவண்டு போய் விடுவார்கள் என்றும் டேணியல் பீதி கிளப்புகிறார்.

அடக்கப்பட்ட உணர்ச்சிகள்

பெண்களைப் பொறுத்தவரை சமூகத்திற்குக் கட்டுப்பட்டவர்களாக உள்ளனர். தாங்கள் சார்ந்த கலாச்சாரம் குறித்து பயப்படும் நிலையில் அவர்கள் வைக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக அவர்களின் செக்ஸ் உணர்ச்சிகள் அடக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. அல்லது தங்களது கலாச்சார, சமூக நிலைக்கேற்ப தங்களை மாற்றிக் கொள்ளும் நிலைக்குப் பெண்கள் தள்ளப்படுகின்றனராம்.

முழுசா வெளிப்பட்டால்

பெண்களின் செக்ஸ் ஆர்வத்தையும், வேட்கையையும், விலங்குகளுன் ஒப்பிடுகிறார் டேணியல். காரணம், விட்டால் அல்லது வாய்ப்பு கிடைத்தால் அந்த அளவுக்கு அதி தீவிரமாகவும், வேகமாகவும் செயல்படுவார்களாம் பெண்கள். மேலும் அடங்காப் பசி என்று சொல்லும் அளவுக்கு எத்தனை முறை ஈடுபட்டாலும் பெண்களின் செக்ஸ் பசி அடங்காத ஒன்றாகும் என்றும் டேணியல் சொல்கிறார்.

நடப்பு வேறு.. உண்மை வேறு

தற்போது பெண்கள் வெளிப்படுத்தி வரும் செக்ஸ் உணர்வுகள் நிஜமானவை அல்ல.உ ண்மையில் அவை அடக்கப்பட்டவை. நிஜத்தில் பெண்கள் விஸ்வரூபம் எடுத்தால் மிகப் பிரமாண்டமானதாக இருக்கும் என்பதும் டேணியலின் கூற்றாகும்.