Tuesday, July 16, 2013

கை மருத்துவத்தில் சிறந்தது சுக்கு

சுக்குடன் சிறிது பால் சேர்த்து, மைய்யாக அரைத்து, நன்கு சூடாக்கி, இளஞ்சூடான பதத்திற்கு ஆறினதும், வலியுள்ள கை, கால் மூட்டுகளில் பூசிவர  மூட்டுவலி முற்றிலும் குணமாகும். சுக்கைத் தூள் செய்து, எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்தால் பித்தம் விலகும். சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி,  சித்தரத்தை இவ்வைந்தையும் இட்டு கஷாயம் செய்து பருகிவர, கடுஞ்சளி மூன்றே நாட்களில் குணமாகும்.

சிறிது சுக்குடன், ஒரு வெற்றிலையை மென்று தின்றால், வாயுத்தொல்லை நீங்கும். சுக்கு, வேப்பம்பட்டை போட்டு கஷாயம் செய்து குடித்துவர,  ஆரம்பநிலை வாதம் குணமாகும். சுக்குடன் சிறிது நீர் தெளித்து, விழுதாக அரைத்து, நெற்றியில் தடவினால் தலைவலி வந்தவழியே போய்விடும்.

சுக்கு, கருப்பட்டி, மிளகு சேர்த்து, "சுக்கு நீர்" காய்ச்சிக் குடித்து வர உடல் அசதி, சோர்வு நீங்கி சுறுசுறுப்பு ஏற்படும். சுக்குடன், தனியா வைத்து சிறிது  நீர் தெளித்து, மைய்யாக அரைத்து உண்டால், அதிக மது அருந்திய போதை தீர்ந்து இயல்பு நிலை ஏற்படும். சுக்கோடு சிறிது வெந்தயம் சேர்த்துப்  பொடியாக்கி, தேனில் கலந்து சாப்பிட்டால், அலர்ஜி தொல்லை அகலும்.

சுக்கு, மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து கஷாயம் செய்து காலை, மாலை குடித்துவர மாந்தம் குணமாகும். சுக்குடன், சிறிது துளசி இலையை மென்று  தின்றால், தொடர் வாந்தி, குமட்டல் நிற்கும். சுக்குடன், மிளகு, சுண்ணாம்பு சேர்த்து மைய்யாக அரைத்துப் பூசிவர, தொண்டைக் கட்டு மாறும். குரல்  இயல்பு நிலைபெறும்.

சிறிது சுக்குடன், சின்ன வெங்காயத்தை வைத்து அரைத்துச் சாப்பிட்டால், மலக்குடலில் உள்ள தீமை தரும் கிருமிகள் அழியும். சுக்குடன்,  கொத்தமல்லி இட்டு கஷாயம் செய்து பருகினால் மூலநோய் தீரும். சுக்கு, ஐந்து மிளகு, ஒரு வெற்றிலை சேர்த்து மென்று தின்று, ஒரு தம்ளர் நீர்  குடித்தால் தேள், பூரான் கடி விஷம் முறியும்.

சுக்கு, அதிமதுரம் இரண்டையும் தூள் செய்து, தேனில் கலந்து சாப்பிட்டுவர குற்றிருமல் குணமாகும். தயிர்சாதத்துடன், சிறிது சுக்குப்பொடி இட்டு  சாப்பிட்டால், வயிற்றுப்புண் ஆறும். சுக்கு , மிளகு, பூண்டு, வேப்பிலை இவைகளைச் சேர்த்து கஷாயம் செய்து, தினம் மூன்று வேளை வீதம் இரண்டு  நாட்கள் குடித்துவர விஷக்காய்ச்சல் குறையும்.

வயிற்றில் உள்ள கிருமிகளால் குழந்தை வளர்ச்சி பாதிக்குமா?

 எண்டோஸ்கோபி சிகிச்சையைப்பற்றிய கேள்விகளுக்கு கோவை என்.ஜி. மருத்துவமனையின் நிறுவனர் மற்றும் லேபராஸ்கோபி மற்றும் எண்டோஸ்கோபி சிகிச்சை நிபுணர் டாக்டர். மனோகரன் பதில் அளிக்கிறார்.

அஜீரணக்கோளாறுக்கும் வயிற்றுவலிக்கும் தொடர்புள்ளதா?
வயிற்றில் புண் இருந்தால் அஜீரணக்கோளாறு ஏற்படும். வலியானது மேல் வயிற்றிலிருந்தால் புண்ணினால் ஏற்படும் வலியாக இருக்கக்கூடும். அடிவயிற்று வலியாக இருந்தால் வேறு ஏதேனும் பிரச்னையாக இருக்கக்கூடும். உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.

வயிற்றில் உள்ள கிருமிகளால் குழந்தைகளின் வளர்ச்சி பாதிக்கப்படுமா?

ஆம். வயிற்றிலுள்ள கிருமிகள் குழந்தைகள் உண்ணும் உணவிலிருக்கும் சத்து மற்றும் வைட்டமின்களை உறிஞ்சிவிடும். அதனால் குழந்தைகளின் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும். எனவே, குழந்தைகளுக்கு தொடர்ச்சியாக மருத்துவ ஆலோசனையின்படி பூச்சி மருந்து கொடுக்க வேண்டும். கை, கால்களை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

வெளியூரில் பணியாற்றி வருகிறேன். 3 வேளையும் ஓட்டல்களில் காரசாரமாக சாப் பிட்டு வருகிறேன். வயதான காலத்தில் பாதிப்பு ஏதேனும் ஏற்பட வாய்ப்புள்ளதா?

ஓட்டல்களில் உபயோகிக்கப்படும் ஏற்கனவே உபயோகித்த எண்ணெய், சுத்தமில்லாத மசாலா மற்றும் சுகாதாரமில்லாமல் சமைக்கப்படும் உணவுப்பொருட்களை அடிக்கடி உண்ணும்போது வயிற்றில் புண் மற்றும் கேன்சர் உருவாக வாய்ப்பிருக்கிறது. எனவே, வீட்டு முறைப்படி சமைக்கும் உணவகத்திலோ அல்லது முடிந்தால் நீங்களாகவே சமை த்தோ உண்பது நல்லது.

கோதுமை சப்பாத்தியை விட மைதா ரொட்டி குடலுக்கு ஆபத்தா?

கோதுமை உடலுக்கு நல்லது. மைதாவை அடிக்கடி உண்பதால் கணையத்தை பாதிக்க வாய்ப்பிருக்கிறது. சில சமயங்களில் வயிறு உப்பிக்கொள்ளும். எனவே மைதா உணவை அடிக்கடி உண்பதை தவிர்ப்பது நல்லது.

குடல் இறக்கம் குழந்தைகளுக்கு வர வாய்ப்பிருக்கிறதா?

குடல் இறக்கம் குழந்தைகளுக்கும் ஏற்படுவதுண்டு. நாட்களை தள்ளிப்போடாமல் சிறு வயதிலேயே அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்வது நல்லது.
குடற்புண்கள் ஆற கீரை வகை நல்லதா? பழங்கள் நல்லதா?

இரண்டுமே நல்லது தான். சுக்கட்டி கீரை போன்ற அனைத்து கீரை வகைகளும் நல்லது. குடற்புண் உள்ளவர்கள் பழங்களில் சிட்ரிக் அமிலங்கள் உள்ள பழங்களை தவிர்த்து மற்ற பழங்களை சேர்த்துக்கொள்ளலாம். ஏனென்றால் சிட்ரிக் அமிலம் உள்ள பழங்கள் புண்ணை அதிகப்படுத்தும்.
அசைவ உணவு செரிமானம் செய்வதற்காக மது அருந்தும் பழக்கம் சரியா? தவறா?


நம் வயிறு என்ன செத்த உடலை புதைக்கும் சுடுகாடா? வயிறே உன்னை ஆராதிக்கிறேன் என்று நம் வயிற்றிற்கேற்றாற்போல சைவ உணவை உண்பது தான் சிறந்தது. அசைவ உணவினால் புட் பாய்சன் போன்ற உபாதைகள் வருகிறது. எனவே அசைவ உணவே கெடுதல் விளைவிக்கும். அதிலும் மது அருந்துவது மிகவும் அதிகமான கெடுதலை விளைவிக்கும்.

புகையிலை, குட்கா பழக்கம் குடலை பாதிக்குமா?

புகையிலை, குட்கா மற்றும் பான்மசாலா போன்ற பொருட்களால் வாய், தொண்டை மட்டுமல்லாமல் குடலையும் பாதிக்கும். சில சமயம் கேன்சர் வருவதற்கும் வாய்ப்பிருக்கிறது.

சிறுகுடலை விட பெருங்குடல் நீளமானதா?

ஆம். சிறுகுடலை விட பெருங்குடல் நீளமானது தான். சிறுகுடலானது வயிற்றிலிருந்து டியோடினம் என்னும் பகுதிவரை உள்ளது. அதற்குப் பின் பெருங்குடல் உள்ளது.

பேதி மாத்திரைகள் உண்மையிலேயே குடலை சுத்தம் செய்கிறதா?

பேதி மாத்திரைகள் குடலை கழுவி சுத்தம் செய்கிறது. முன்பெல்லாம் பேதி மாத்திரை குடலிலுள்ள பொருட்கள், கிருமிகள் அனைத்தையும் வெளியேற்றி சுத்தப்படுத்தும். ஆனால், தற்போது வயிற்றிலுள்ள கிருமிகளை கொன்று பின்பு அனைத்தையும் வெளியேற்றுகிறது.

துணையை கவரும் மசாஜ் விளையாட்டு

உடலும் மனதும் உற்சாகமாக இருந்தால் மட்டுமே தாம்பத்ய விளையாட்டினை ஆர்வமாக விளையாட முடியும். எந்த சிக்கலும் இன்றி ரிலாக்ஸ் ஆக இருக்க முதலில் அதற்கேற்ப மூடுக்கு கொண்டுவரவேண்டும். உடலையும் மனதையும் ரிலாக்ஸ் செய்வதில் மசாஜ் முக்கிய பங்கு வகிக்கிறது. மசாஜ் மூலம் உச்சந்தலைமுதல் உள்ளங்கால் வரை ஒவ்வொரு செல்லையும் உணர்ச்சியூட்ட முடியும். மசாஜ் செய்வது சாதாரணமாக எல்லோருக்கும் கைவந்து விடாது அது ஒரு கலை அதை எவ்வாறு கையாளவேண்டும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர் படியுங்களேன்.

மென்மையான படுக்கை

இரவோ, பகலோ உறுத்தல் இல்லாத மென்மையான வெளிச்சத்தில் படுக்கை அறை இருக்கவேண்டும். அதில் யாருக்கு மசாஜ் தேவையோ அவர்களை ரிலாக்ஸ் ஆக படுக்கவைத்து உள்ளாடைகளை மட்டும் அணிந்து கொள்ளுமாறு செய்துவிட்டு தேவையற்ற ஆடைகளை களையுங்கள். பஞ்சு மெத்தையைவிட தண்ணீர் படுக்கை இருந்தால் மசாஜ்க்கு மிகவும் ஏற்றது. கழுத்து, முழங்கால், உள்ளிட்ட இடங்களில் சற்றே தூக்கலாக தலையணையை வைத்துவிடுங்கள்.

வாசனையான எண்ணெய்

மசாஜ் செய்வதற்கு சிலர் வாசனை எண்ணெயை பயன்படுத்துவார்கள். சிலர் வெறும் கையையே பயன்படுத்தி உணர்ச்சியை உற்சாகமாக தூண்டுவார்கள். எண்ணெயை மெதுவாக சூடு படுத்திவைத்துக்கொள்வது நல்லது. அது தசைப்பிடிப்பையும், அழுத்தத்தையும் நீக்கும்.

மென்மையான இசை

படுக்கை அறையில் மெல்லிய வெளிச்சம் எந்த அளவிற்கு முக்கியமோ அதேபோல மென்மையான இசையை கசிய விடுங்கள். அது இருவரையுமே உற்சாகப்படுத்தும்.

சரியாக தொடங்குங்கள்

எந்த ஒரு செயலையும் சரியாக தொடங்கினாலே பாதி வெற்றி கிடைத்துவிடும். மசாஜ் செய்வதும் அப்படித்தான் எங்கே தொடங்கி எப்படி முடிக்கிறோம் என்பதில்தான் வெற்றியின் சூட்சுமமே இருக்கிறது. மென்மையான கைகள்தான் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. உங்கள் துணைக்கு தலையில் தொடங்குவது பிடிக்கும் எனில் உச்சந்தலையில் இருந்து தொடங்குங்கள். கால்களில் தொடங்குவது வசதி எனில் கால்களில் இருந்து மென்மையாய் ஆரம்பியுங்கள். பின்னர் ஒவ்வொரு பகுதியையும் தனித்தனியாக போகஸ் செய்து மென்மையாக பிடித்து விடுங்கள். உடம்பின் ஒவ்வொரு செல்லும் உங்களின் மென்மையை உணரவேண்டும். வேறு எதுவும் வேண்டாம். நீங்கள் மசாஜ் செய்வதே உங்கள் துணையை ஆகாயத்தில் பறக்கச் செய்யும்.

சரியாக சொல்லுங்கள்

தோள் பட்டை பகுதியிலோ, முதுகுப் பகுதியிலோ கூடுதலாக மசாஜ் செய்யவேண்டும் என்று விரும்பினால் அதை உங்கள் துணையிடம் கூறலாம். அந்த இடத்தில் வலி இருக்கிறது. இன்னும் கொஞ்சம் அழுத்தம் கொடுத்தால் நன்றாக இருக்குமே என்று சொல்லுங்கள். முதுகுப் பகுதியில் மசாஜ் செய்யும் போது துணையின் மீது ஏறி அமர்ந்து கூட செய்யலாம் அது கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தும்.

மசாஜ் செய்வது சாதாரணமாக எல்லோராலும் செய்து விட முடியாது அதற்கென நிபுணர்கள் இருக்கின்றனர். மசாஜ் பார்லர்களும் இருக்கின்றன. அங்கெல்லாம் சென்றால் செலவு பழுத்துவிடும் சரியான சுகமும் கிடைக்காது. எனவே வீட்டிலேயே உங்கள் துணையிடமே மசாஜ் செய்து கொள்வதுதான் செலவில்லாததும், பாதுகாப்பானதும் கூட என்கின்றனர் நிபுணர்கள்.

பழைய சாதத்தில் பலம் இருக்கு

முதல் நாள் தண்ணீர் ஊற்றி வைத்து விட்டு மறுநாள் நாம் சாப்பிடும் இந்த பழைய சாத்தில் தான் பி6 பி12 அதிகமாக இருக்கிது என் கூறுகின்றனர்  அமெரிக்க மருத்துவர்கள். குறிப்பாக நமது உடலின் சிறுகுடலுக்கு நன்மை செய்யும் ட்ரில்லியன்ஸ் ஆஃப் பாக்டீரியாஸ் அதிகமாகி நமது உணவுப்  பாதையை ஆரோக்கியமாக வைத்திருக்கிறதாம்.

பொதுவாக கிராமத்தில் கஞ்சி சாப்பிடும்போது கஞ்சியுடன் வெங்காயம் சேர்த்து சாப்பிடுவது தான் வழக்கம். சிறிய வெங்காயத்தை சேர்த்து  சாப்பிடும்போது நோய் எதிர்ப்பு சக்தி பெருகுவதால் வைரஸ் காய்ச்சல் என எந்த ஒரு காய்ச்சலும் நம்மை அணுகாது. பழைய சாதத்தில் என்ன பயன்  இருக்கிறது என்று தெரிந்து கொள்வோம்.

இரவு வேளையில் தண்ணீர் ஊற்றி வைப்பதால் சாதத்தில் அதிகளவு நல்ல பாக்டீரியாக்கள் உருவாகுகிறது. இதனை காலை வேளை உணவாக  எடுத்துக்கொள்வதால் உடல் லேசாகவும் அதே சமயம் சுறுசுறுப்பாகவும் இருக்கிறது. மேலும் உடல் சூட்டை தணிப்பதோடு குடல்புண், வயிற்றுவலி,  போன்றவற்றையும் குணப்படுத்துகிறது.. இந்த பணியோடு நின்றுவிடாமல் நார்ச்சத்து, மலச்சிக்கல், பிரச்சனைகளை தீர்த்து உடலை சீராக இயங்கச்  செய்கிறது..

உடலை சோர்விலிருந்து மீட்டு சுறுசுறுப்பாக இயங்கச்செய்யும். அதற்காக சூடாக தயாரித்த சாதத்தில் தண்ணீரை ஊற்றி சாப்பிடக்கூடாது. முதல் நாள்  இரவு மீந்த சோற்றை எடுத்து நல்ல தண்ணீர் ஊற்றி முடிவிட வேண்டும். மறுநாள் சாப்பிடும் முன் சாதத்தை நன்கு பிழிந்து மோர் சேர்த்து வெங்காய்  வைத்து சாப்பிடலாம்.

Friday, June 14, 2013

எந்த கீரை சாப்பிட்டால் என்ன நோய் குணமாகும்-- இயற்கை மருத்துவம்

கொத்தமல்லி கீரை: மூளை, மூக்கு சம்பந்தமான சகல வியாதிகளும் குணமாகும். பசியைத் தூண்டும்.

அரைக்கீரை: நரம்பு தளர்ச்சியை போக்கும். தாய்ப்பால் பெருகும்.

வள்ளாரை: நினைவாற்றலை அதிகமாகும். யானைக்கால் நோய் குணமாகும்.

அகத்திக்கீரை: மலச்சிக்கலைப் போக்கும்.

முளைக்கீரை: பல் சம்பந்தமான வியாதிகளை குணமாக்கும்.

பொன்னாங்கன்னி: இரத்தம் விருத்தியாகும்.

தர்ப்பைப் புல்: இரத்தம் சுத்தமாகும். கஷாயம் வைத்து பருகவும்.

தூதுவளை: மூச்சு வாங்குதல் குணமாகும்.

முருங்கை கீரை: பொறியல் செய்து நெய்விட்டு 48 நாட்கள் சாட்பபிட தாது விருத்தியாகும்.

சிறுகீரை: நீர்கோவை குணமாகும்.

வெந்தியக்கீரை: இருமல் குணமாகும்

புதினா கீரை: மசக்கை மயக்கம், வாந்தி குணமாகும்.

அறுகீரை: சளிக்காய்ச்சல், டைபாய்டு குணமாகும்

Tuesday, June 11, 2013

கோடைக்கு கொடையாகும் பழங்கள்

கோடை கடுமையானதுதான். ஆனால் அதற்கேற்பச் சில மாற்றங்களை ஏற்படுத்திக்கொள்வதன் மூலம் கோடையின் கொடுமையில் இருந்து தப்பித்துவிட முடியும். அந்த வகையில் சில பழங்கள் நமக்குப் பெரிதும் கைகொடுக்கின்றன. அவை பற்றி… * தர்பூசணி: தற்போது எங்கும் கிடைக்கும் தர்பூசணி, தாகத்தைத் தணிக்கும். பசியைப் போக்கும். வயிற்றுப் பொருமலைக் குறைக்கும். பித்தச் சூட்டை விரட்டும். வயிறு எரிச்சல், அடி வயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரிசெய்யும். சிறு நீரகக் கோளாறுகள், சிறுநீர்ப்பைக் கற்கள் சேருவதைத் தடுக்கும் மருந்தாக உதவும். உடலுக்குக் குளிர்ச்சியையும், புத்துணர்ச்சியையும் தரும்.
* ஆரஞ்சு: பசியைத் தூண்டவும், ரத்தத்தைச் சுத்திகரிக்கவும், பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் பயன்படுகிறது. ஆரஞ்சை ஆயுர்வேத வைத்திய முறை பெரிதும் பயன்படுத்துகிறது. ஆரஞ்சு வாயைச் சுத்தமாக்குகிறது. காய்ச்சலுக்கும் அருமருந்து. அடிவயிற்று வலியைக் குறைக்கும். குடற்புழுக்களை அழிக்கும். எலும்புகளை வலுப்படுத்தும். ஆஸ்துமா மற்றும் நெஞ்சக நோயாளிகளுக்கு ஆரஞ்சு நல்லது.
* சாத்துக்குடி: குளிர்ச்சியான, இனிப்பான, சுவையான பழம் சாத்துக்குடி. தாகத்தைத் தணிக்கும். வீரியத்தைக் கூட்டும். வயிற்றுப் பொருமல், வாயு, இருமல், வாந்தி, தண்ணீரற்றுப் போகும் வறட்சிநிலை, ரத்தத்தில் கழிவுப்பொருட்கள் சேருதல், செரிமானமின்மை போன்ற கோளாறுகளுக்கு நல்ல நிவாரணமாக இருக்கிறது.
வயிற்றில் அமிலத்தன்மை சேருவதை இதில் உள்ள காரத்தன்மை குறைத்து, வயிற்று எரிச்சலைக் கட்டுப்படுத்துகிறது. நோய் எதிர்ப்பு ஆற்றலையும் அதிகம் கொண் சளியால் அடிக்கடி அவதிப்படுபவர்கள், சாத்துக்குடியின் சாறை வெந்நீரில் கலந்து அல்லது இஞ்சிச் சாறுடன் சேர்த்துக் குடித்தால் நல்ல பலனிருக்கும்.
காய்ச்சலின்போது வெறுமனே சாத்துக்குடி சாறைக் குடித்தாலே போதும். உடலுக்கு வேண்டிய சக்தி கிடைத்துவிடும். அமிலத்தன்மையைத் தணித்து, பசியை உண்டாக்கும். செரிமானக் கோளாறுகளை வேகமாகப் போக்கும்.
* வெள்ளரிக்காய்: வெள்ளரியில் பிஞ்சாகவும், காயாகவும் இரண்டு வகையுண்டு. வெள்ளரியும் நல்ல நீரிளக்கி. செரிமானத்துக்கு உதவுவது. வெள்ளரிப்பிஞ்சு பித்தத்தைத் தணித்து குடல்களுக்குக் குளிர்ச்சியூட்டுகிறது. சிறுநீரகக் கோளாறுகளைச் சரிசெய்கிறது. நெஞ்செரிச்சலைக் கட்டுப்படுத்துகிறது.

தலை சுற்றலைத் தடுக்கிறது. வெள்ளரி, மூட்டுவலி வீக்க நோய்களையும் குணமாக்குகிறது என்று சமீபத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே கோடையில் நாம் அவசியம் சாப்பிட வேண்டிய காய்கறி வெள்ளரி.   

கறிவேப்பிலை

சமையல் சுவையைக் கூட்ட உதவும் கறிவேப்பிலை கடைகளில் காய்கறி வாங்கும் போது கொசுறாகவும் கிடைப்பதாலோ என்னவோ அதன் அருமை பெருமை பலருக்கும் தெரிவதில்லை. உணவுச் செரிமானத்துக்கு ஓர் உன்னதமான பொருளாக விளங்குகிறது கறிவேப்பிலை. 


வைட்டமின் ஏ சுண்ணாம்பு சத்து போலிக் ஆசிட் போன்றவை இதில் நிரம்பி உள்ளன. இரும்புச்சத்தை மிகைப்படுத்தி உடலுக்கு உறுதியைக் கொடுக்கிறது. ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் எலும்புத்தாது அடர்த்திக் குறைவு நோய் முதுமைப் பருவத்தில் வருவதைத் தடுக்கிறது. 


கெட்ட கொழுப்பை கரைத்து பட்டழகை கொடுக்கிறது. பூச்சிக்கடி ஒவ்வாமையால் தோலில் ஏற்படும் அரிப்பைத் தணிக்கிறது.இதிலுள்ள பி- கரோட்டீன் உடல் உள் இயக்கத்தை சீர்படுத்துகிறது. கண் பார்வை கூர்மைக்கும் தலைமுடி கருகருவென அடர்த்தியாக வளரவும் கறிவேப்பிலை சிறந்த மூலிகை போன்று செய்லபடுகிறது. 


இளநரையை கட்டுப்படுத்துகிறது. இதன் இலைகளை அரைத்து தலைக்குத் தேய்க்கும் எண்ணெயில் கலந்து காய்ந்து பயன்படுத்துவதும நல்ல பலனைத் தரும். நீரிழிவுநோய் உள்ளவர்கள் கறிவேப்பிலையை பச்சையாக மென்று தின்றால் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும். 


இலையை காய வைத்து அரைத்து பொடியாக தயார்செய்து தண்ணீரில் கலந்தும் பருகலாம். தன் மருத்துவக் குணங்களால் வெளிநாட்டினர் மருத்துவக் குணங்களால் வெளிநாட்டினர் வியக்கும். 


இந்தியாவில் உள்ள சிறந்த மூலிகை வகைகளில் வேப்பிலையுடன் கறிவேப்பிலையும் பிரதான இடத்தைப் பிடித்திருக்கிறது. இதன் பூர்வீகம் தென் இந்தியா என்பது பெருமைக்குரியது.